இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தர பிரதேஷ் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இந்த போட்டியில் மழையும் மூன்றாவது அணியாக பெரிய பிரச்சனை செய்து வருகிறது.
நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் மழை குறுக்கீடு செய்த காரணத்தினால் முதல் நாளில் 34 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது. பங்களாதேஷ் அணி 107 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இரண்டாவது நாளில் ஏற்பட்ட சோகம்
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளில் குறைந்தபட்சம் 50 ஓவர்களாவது போட்டி நடத்தப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். வானிலை அறிக்கையிலும் முதல் நாளை விட இரண்டாவது நாள் ஓர் அளவுக்கு சுமாராகவே இருந்தது. எனவே ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள்.
இப்படியான நிலையில் நேற்றை விட இன்று மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் கான்பூர் மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதி மிகவும் சுமாராக இருக்கிறது. இதன் காரணமாக மழை நின்றால் கூட போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று இரண்டாவது நாள் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டு விட்டது.
2015 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்
இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது நாள் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பிறகு 9 வருடங்களாக இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் முழு நாளும் ரத்து செய்யப்படவில்லை.
இதையும் படிங்க : இனி ரிஷப் பண்ட்டை அப்படி கூப்பிட முடியாது.. பும்ரா மேஜிக் இவருக்கும் நடந்திருக்கிறது – ஆகாஷ் சோப்ரா பேச்சு
தற்போது ஒன்பது வருடங்களுக்குப் பிறகு கான்பூர் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. உள்நாட்டில் பங்களாதேஷ் மாதிரியான சிறிய அணிக்கு எதிராக வெற்றி பெற்று புள்ளிகளை பெறுவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வதற்கு அவசியமானது. இந்த நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவடைவது இந்திய அணிக்கு சிறிய பின்னடைவுகளை உருவாக்கலாம்.