இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சாலை விபத்திற்குப் பிறகு மிகவும் ஃபிட்டாக மாறிவிட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் இரண்டு வருடங்களுக்கும் பக்கம் கிரிக்கெட் விளையாடாமல் வெளியில் இருந்தார். இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரிஷப் பண்ணிட்டு சதம் அடித்து அசத்தினார்.
சிறப்பாக திரும்பி வந்த பும்ரா
பும்ரா 2021ஆம் ஆண்டு முதுகு பிரச்சனை காரணமாக காயம் அடைந்தார். பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பி வந்த அவர் முன்பை விட பந்துவீச்சில் சிறப்பாக மாறினார். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியே எடுப்பதில் அவருடைய திறமை மிகவும் கூர்மையாக மாறி இருந்தது.
இப்படி பும்ரா காயத்தில் இருந்து திரும்பிய பிறகு அவர் முன்பை விட பேட்ஸ்மேன்களுக்கு அபாயகரமான பந்துவீச்சாளராக உருவெடுத்தார். தற்பொழுது அவர் பந்துவீச்சை விளையாடுவது வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பொதுவாக பெரிய பிரச்சினையாகவே மாறிவிட்டிருக்கிறது. இந்த வகையில் இந்திய அணிக்கு திரும்பி வந்த ரிஷப் பண்ட்டும் உடல் தகுதியில் பெரிய அளவில் மாறி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் முதிர்ச்சி
தற்பொழுது ரிஷப் பண்ட் பழைய முறையில் அதிரடியாக விளையாடினாலும் கூட, சாலை விபத்தில் சிக்கி மீண்டும் வந்ததற்கு பிறகு அவருடைய ஷாட் செலக்சன் சிறப்பாக இருக்கிறது. மேலும் அவர் முன்பை விட வேகமானவராகவும் இருக்கிறார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “விபத்தை சந்திப்பதற்கு முன்பு அவர் கொஞ்சம் பருமனாக இருந்ததால் அவரை நாம் கோலு என்று அழைத்தோம். இனி அவரை நாம் அப்படி அழைக்க முடியாது. அவர் தற்பொழுது மிகவும் ஃபிட்டாக மாறியிருக்கிறார்”
முகமது ஷமியின் இடத்துக்கு.. இந்த 27 வயசு பையன்தான் சரியான ஆளு.. அச்சு அசலா இருக்கும் – ஜாகீர் கான் கணிப்பு இதையும் படிங்க :
“விளையாட்டில் இருந்து வெளியே இருந்த பொழுது அவர் தன குறித்து சிந்திப்பதற்கு நிறைய நேரம் அவருக்கு கொடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தை அவர் தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்தி இருக்கிறார். மேலும் அவர் முன்பை விட சிறந்த நிலையில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.