3வது நடுவரே இல்லை.. ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து போட்டியில் வினோதம்.. பின்னணி காரணம் என்ன?

0
286
Australia

ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்றாவது நடுவர் இல்லை என்கின்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் பின்னணியில் என்ன காரணம் இருக்கலாம் என்று சமூக வலைதளத்தில் பகிரப்படும் விஷயங்கள் வருத்தத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி இந்த மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன்பாக இங்கிலாந்து அருகிலுள்ள ஸ்காட்லாந்து உள்ள காரணத்தினால் அந்த அணிக்கு எதிராகவும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இரண்டாவது டி20 போட்டியில் தெரிந்த விஷயம்

இன்று ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்யும் பொழுது மூன்றாவது ஓவரில் ஆஸ்திரேலியா வீர ஜாக் பிரேசர் மெக்கர்க் விளையாடிய பந்து இன்சைட் எட்ஜ் எடுத்து விக்கெட் கீப்பர் இடம் சென்றது.

ஸ்காட்லாந்து விக்கெட் கீப்பர் உடனடியாக பந்தை பிடித்து ஸ்டெம்பை அடித்து அவுட் கேட்டார். ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் அவுட் தரவில்லை, அதே சமயத்தில் இது போன்ற அவுட் அப்பீல்களுக்கு பொதுவாக மூன்றாவது நடுவரிடம் செல்வது போல செல்லவில்லை. அப்பொழுதுதான் இந்த தொடரில் மூன்றாவது நடுவரே இல்லாமல் விளையாடுகிறார்கள் என்று தெரிய வந்தது.

- Advertisement -

பின்னணி காரணம் என்னவாக இருக்கும்?

அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக மற்ற பெரிய அணிகள் விளையாடக்கூடிய நிகழ்வுகள் அவ்வப்பொழுது நடக்கிறது. குறிப்பாக பெரிய அணிகள் இங்கிலாந்து சென்று விளையாடும் பொழுது இந்த அணிகளுக்கு எதிராகவும் ஒரு தொடரில் விளையாடிவிட்டு செல்கிறார்கள். ஏனென்றால் இந்த இரு நாடுகளும் இங்கிலாந்துக்கு மிக அருகில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டியை தற்கால கிரிக்கெட் வசதிகளோடு நடத்துவதற்கு ஸ்காட்லாந்து கிரிக்கெட் நிர்வாகத்திடம் பணம் இல்லாத காரணத்தினால்தான் மூன்றாவது நடுவர் இல்லாமல் நடக்கும் என்று சமூக வலைதளத்தில் இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலும் இதுவே காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சச்சின் சாதனையை ரூட் முறியடிக்க மாட்டார்.. ஒருவேல ட்ரை பண்ணா இவங்கள சும்மா விட மாட்டேன் – பாசித் அலி பேட்டி

ஏனென்றால் களத்திற்கு இரண்டு நடுவர்கள், இவர்களுக்கு மாற்று நடுவர் ஒருவர், மேட்ச் ரெப்ரி என மொத்தம் நான்கு பேர் இந்த போட்டிக்கு செயல்பட்டார்கள். மூன்றாவது நடுவர் மட்டுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -