“காணாமல் போன அந்த இந்திய பிளேயர் கிடைச்சுட்டாரு.. இனி கவலை கிடையாது!” – கவாஸ்கர் பரபரப்பான பேச்சு!

0
3256
Gavaskar

நடப்பு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்தாலுமே, இந்திய அணி எப்படி செயல்படும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிர்வாகத்திற்குமே பெரிய சந்தேகங்கள் இருந்திருக்கும்.

ஆனால் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியின் செயல்பாடு எதிரணிகளை எந்த இடத்திலும் எழவே விடாமல் இருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சரியமானது.

- Advertisement -

மிகக்குறிப்பாக உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற அதிகபட்ச வாய்ப்பு இருந்த பும்ரா, ஸ்ரேயாஸ், கே.எல். ராகுல் ஆகிய மூன்று முக்கிய வீரர்கள் காயத்தில் இருந்தார்கள். இவர்கள் காயத்தில் இருந்து திரும்பி வருவார்களா என்பதே முதலில் கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில் காயம் குணமடைந்து இந்திய அணிக்குள் திரும்பி வந்த இந்த மூன்று வீரர்களும் ஆச்சரியப்படும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார்கள். பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் செயல்படும் முறை அபாரமாக இருக்கிறது.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “நேற்று கே எல் ராகுல் அப்படி ஒரு ஷாட் மூலம் சதத்தை எட்டியது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. ஐபிஎல் தொடரில் அதை அவர் செய்ததை பார்த்திருக்கிறோம். மீண்டும் உலக கோப்பையில் சதம் அடிப்பதற்காக அதை அவர் கொண்டு வந்ததை பார்க்க அருமையாக இருந்தது.

- Advertisement -

இதுதான் நமக்கு வழக்கமாக தெரிந்த கேஎல் ராகுல். இவ்வளவு நாள் நாங்கள் பார்க்க முடியாமல் காணாமல் போன கேஎல் ராகுல் தற்பொழுது மீண்டும் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.

இந்திய அணியில் பேட்டிங்கில் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. டாப் ஆர்டர்கள் மூன்று பேரும் அரை சதம் பெற்ற பிறகு, நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் வந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் சதம் அடிப்பது பெரிய விஷயம்.

ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் இருவரும் அற்புதமான பேட்டிங் செய்தார்கள். அவர்கள் விளையாடியதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அரையிறுதிக்குள் செல்லும் பொழுது இது நல்ல அறிகுறி!” என்று கூறியிருக்கிறார்!