தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழு கூண்டோடு நீக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் பிசிசிஐ வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக சர்வதேச அணிக்கு ஒரு புதிய தலைமை பயிற்சியாளர் வருகின்ற பொழுது அவர் தன்னுடன் பணியாற்ற பயிற்சியாளர் குழுவையும் தன்னுடைய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்வார். இந்த அடிப்படையில் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிந்த பிறகு புதிய தலைமை பயிற்சியாளராக வந்த கம்பீர் தன்னுடைய விருப்பத்திற்கு பயிற்சியாளர் குழுவை அமைத்துக் கொண்டார்.
கம்பீரின் பயிற்சியாளர் குழு
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கம்பீர் வந்ததும் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். அதே சமயத்தில் ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் பில்டிங் பயிற்சியாளராக இருந்த டி.திலீப் தொடர்ந்து பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
மேலும் கம்பீர் தனது பயிற்சியாளர் குழுவில் நெதர்லாந்தின் டென் டஸ்கேட்டையும் இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் தோற்றத்தின் காரணமாக, கம்பீரின் பயிற்சி குழுவில் மேலும் ஒரு பேட்டிங் பயிற்சியாளராக ஷசான்சு கோடக் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்கள்
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டி.திலீப், மேலும் உடற்பகுதி மேம்பாட்டு பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகிய மூவரும் நீக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இந்த செய்தி நம்பக்கூடிய உறுதியான செய்தி என்றே சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : 300 ரன் அடிக்க போறோம்.. பழைய டீம் மும்பை ஜாக்கிரதை.. இது நடந்தா முடிஞ்சிடும் – இஷான் கிஷான் பேட்டி
ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் ஆரம்பிக்கிறது. இதில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து சென்று இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதன் காரணமாக பயிற்சியாளர் குழுவில் பிசிசிஐ மாற்றங்களை செய்து இருப்பதாகவும், கூடிய விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.