பிசிசிஐ கேட்ட உதவி செய்யல.. எங்க ஊர்ல நொய்டாவை விட நல்ல மைதானம் இருக்கு – ஆப்கான் கிரிக்கெட் வாரியம் ஏமாற்றம்

0
357
Afghanistan

ஆப்கானிஸ்தான அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் விளையாட இருந்தது. தற்பொழுது இந்த மைதானத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் போட்டி இரண்டு நாள் ரத்தானது பெரிய விமர்சனம் ஆகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறது. அதில் ஒரு பகுதியாக இந்தியாவில் டெல்லி கிரேட்டர் நொய்டா, உத்திர பிரதேஷ் லக்னோ மற்றும் டேராடூன் ஆகிய மூன்று இடங்களில் ஆப்கானிஸ்தான் அணி தங்கள் போட்டியை நடத்திக் கொள்ள பிசிசிஐ அனுமதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மழையே இல்லை ஆனால் போட்டி நடக்கவில்லை

இந்த நிலையில் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பாக கிரேட்டர் நொய்டா மைதானத்தைச் சுற்றிலும் பலத்தை மழை பெய்து தண்ணீர் தேங்கியது. அதே சமயத்தில் நேற்று செப்டம்பர் 9 மற்றும் இன்று செப்டம்பர் 10ஆம் தேதியில் மைதானத்தைச் சுற்றிலும் மழை பெய்யவில்லை.

இருந்த போதிலும் கூட ஏற்கனவே பெய்த மழை தேங்கி இருந்த காரணத்தினாலும், மைதானத்தில் மழை நீரை அகற்றுவதற்கான சரியான வசதிகள் இல்லாத காரணத்தினாலும், போட்டியின் முதல் இரண்டு நாட்களும் நடத்தப்பட முடியாமல் வீணாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு மைதானத்தை சர்வதேச போட்டிக்கு பிசிசிஐ ஒதுக்கி தந்தது தற்பொழுது பெரிய விமர்சனம் ஆகி வருகிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் தரப்பில் ஏமாற்றம்

இது குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் கூறப்படும் பொழுது “இது ஒரு பெரிய குழப்பம். நாங்கள் இங்கு திரும்பி வர மாட்டோம். எங்கள் வீரர்களும் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை. எங்களுடைய முதல் தேர்வு லக்னோ மற்றும் டேராடூன் என இரண்டு மைதானங்கள்தான் இருந்தது. ஆனால் பிசிசிஐ எங்களுக்கு இந்த இரண்டு மைதானங்களையும் கொடுக்கவில்லை. ஏனென்றால் குறிப்பிட்ட அந்த இரண்டு மைதானங்களிலும் மாநில டி20 லீக்குகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் இருந்த ஒரே மைதானம் கொடுக்கப்பட்டது” என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸமதுல்லா ஷாகிதி கூறும் பொழுது “நாங்கள் இங்கு நான்கு ஆண்டுகளுக்கு வந்த பொழுது எப்படி இருந்தது அப்படியேதான் இருக்கிறது. நீங்க வேறு எந்த வசதிகளும் செய்யப்படவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : பாவம் அந்த 2 பசங்க.. கேஎல் ராகுல் பண்ட் வரதால பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது – ஸ்ரீகாந்த் வருத்தம்

இந்த நிலையில் பெயரிடப்படாத ஆப்கான் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது “நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள மைதானங்களில் இதைவிட சிறந்த வசதிகள் இருக்கின்றன. நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக எங்களுடைய உள்கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கிறோம். ஆனால் ஷாகிதி சொன்னது போல நொய்டா மைதானத்தில் எதுவுமே மாறவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -