தற்போது இந்திய அணி புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வழிகாட்டலில் வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கம்பீர் பற்றி பங்களாதேஷ் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் பேசியிருக்கிறார்.
இந்திய அணி நிர்வாகம் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு பங்களாதேஷ் அணிக்கு எதிராகவே பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறது என்பதிலிருந்து கம்பீர எல்லா விஷயங்களையும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர் என்பதை உணர முடிகிறது. தொடர்ந்து அவர் அப்படியான முடிவுகளை எடுத்து வருகிறார்.
வழக்கத்திற்கு மாறான கம்பீர்
பொதுவாக கம்பீர் எப்பொழுதும் ஆக்ரோஷமான குணம் கொண்டவராகவே அறியப்பட்டிருக்கிறார். ஆனால் இந்திய அணிக்கு வந்த பிறகு அவர் முகத்தில் சலிப்போ அல்லது கோபமோ எதுவும் இல்லாமல் வீரர்களுடன் தொடர்ந்து நல்ல முறையில் பழகி வருகிறார்.
குறிப்பாக கம்பீரம் விராட் கோலி உடன் நெருக்கமாக பழகி வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இருவரும் ஐபிஎல் தொடரில் இரண்டு முறை களத்தில் நேருக்கு நேராக மோதிக்கொண்ட போதிலும், அதையெல்லாம் உடனே மறந்து இந்திய அணிக்காக நல்ல நட்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ரவிச்சந்திரன் அஸ்வினும் கம்பீர் மிகவும் ரிலாக்ஸ் ஆனவர், டிராவிட்தான் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறியிருந்தார்.
கம்பீர் குணம் வெளியில் வரும்
இப்படியான நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் நிஜமான குணம் கட்டாயம் வெளியில் வரும் என்றும், அதற்கான ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை இந்திய அணிக்கு அமைய வேண்டும் எனவும், பங்களாதேஷ் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் கூறியிருக்கிறார்.
இது குறித்து தமிம் இக்பால் கூறும்பொழுது “நீங்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு ஒரு மனிதரின் உண்மையான குணம் வெளியில் தெரிய வராது. நீங்கள் ஒரு தொடரை இழந்து அதற்கு அடுத்து இன்னொரு தொடரையும் இழக்கும் பொழுது உண்மையான குணம் வெளியில் வரும்”
இதையும் படிங்க : எனக்கு ஹர்திக் பத்தி நல்லா தெரியும்.. அவரால அதை பண்ணவே முடியாது.. ஆச்சரியம்தான் – தினேஷ் கார்த்திக் பேட்டி
“சந்தேகமே இல்லாமல் கம்பீர் திறமையான மனிதர்தான். ஆனால் நான் சொன்னது போல இந்திய அணிக்கு சீக்கிரத்திலேயே தொடர்ந்து இரண்டு தொடர்களை தோற்கும் நிலைமை வந்தால் பிறகு என்ன நடக்கிறது? என்று நீங்களே பாருங்கள்” எனக் கூறி இருக்கிறார்.