இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு குறிப்பிட்ட விஷயம் ஹர்திக் பாண்டியா செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று அப்படி நடந்தால்தான் ஆச்சரியப்படுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு நிறைய வித்தியாசமான விஷயங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதில் ஒரு விஷயமாக தற்பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஓய்வும் அவர் செய்து கொண்டிருக்கும் பயிற்சிகளும் அமைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவை யோசிக்க வைக்கும் ஹர்திக் பாண்டியா
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் மிகவும் முக்கிய பங்கை வகிப்பார்கள். இதற்கு ஆஸ்திரேலியா தரப்பில் மிட்சல் மார்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருக்கிறார்கள்.
அதே சமயத்தில் இந்திய அணி தரப்பில் பார்த்தால் இப்போதைக்கு ஷர்துல் தாக்கூர் மட்டுமே இருக்கிறார். ஆனால் அவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலுமே பெரிய நம்பிக்கை வைக்க முடியாது. இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அவர் தற்போது சிவப்பு பந்தில் பயிற்சி எடுத்து வருகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவாரா? என்று தெரியாது. இது ஆஸ்திரேலியாவை அதிகம் சிந்திக்க வைத்திருக்கிறது.
கம்பீர் மாஸ்டர் பிளானா?
இந்த நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஹர்திக் பாண்டியாவை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார் என்கின்ற செய்திகள் யூகங்களாக பரவிக் கொண்டிருக்கிறது. அப்படி இது நடக்கும் பட்சத்தில் பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருக்கும்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” ஆஹா ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு வந்தால் அது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். ஆஸ்திரேலியா சூழ்நிலையில் பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் செயல்படக்கூடிய ஒருவர் இந்திய அணியில் இருந்தால் அது நல்ல ஒன்றாக இருக்கும்”
இதையும் படிங்க : 60 வருடம் கழித்து ரோகித் புது ஐடியா.. பங்களாதேஷின் 42 வருட முடிவுக்கு பதிலடி.. கான்பூர் 2வது டெஸ்ட்
“ஆனால் உண்மையைச் சொல்வதாக இருந்தால், நான் இதற்கு ஆச்சரியப்படுவேன். ஏனென்றால் அவர் உடல் குறித்து எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் அவ்வளவு எளிதானது கிடையாது. அவர் இன்று இருக்கும் சூழ்நிலையில் இருந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு வந்தால் நான் உண்மையில் ஆச்சரியப்படத்தான் செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.