தற்போது தமிழ்நாட்டில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் வடிவிலான புச்சி பாபு டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணியும் மும்பை அணியும் மோதிக் கொள்ளும் போட்டிநடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தார். தமிழக அணியில் சாய் கிஷோர் இடம் பெறவில்லை. மேலும் நட்சத்திர வீரர்கள் பாபா இந்திரஜித் தவிர வேறு யாரும் இல்லை. வளர்ந்து வரும் இளம் வீரர்களில் பிரதோஷ் ரஞ்சன் பால் இடம் பெற்று இருக்கிறார்.
வலிமையான மும்பை
அதே சமயத்தில் மும்பை அணியில் சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் சப்ராஸ்கான் மற்றும் அவருடைய தம்பி முஷீர் கான், மேலும் மும்பை மாநில கிரிக்கெட் அணியின் நம்பிக்கை சுழல் பந்துவீச்சு நட்சத்திரம் சாம்ஸ் முலானி என பெரிய வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு அதீஷ் 66 பந்தில் 18 ரன்கள், லோகேஷ்வர் 29 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பாக விளையாடி 87 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் உடன் 66 ரன்கள் எடுத்தார்.
தமிழக அணி சிறப்பான ஆட்டம்
இதற்கு அடுத்து உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வரும் பாபா இந்திரஜித் 115 ஏழு பவுண்டரிகள் உடன் 61 ரன்கள் எடுத்தார். மோகித் ஹரி கிருஷ்ணன் 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் உடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு முதல் நாளை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
இன்று தமிழக அணி முதல் நாளில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்திருக்கிறது. களத்தில் ஆட்டம் இழக்காமல் பூபதி குமார் 121 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 66 ரன்கள், இளம் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சோனு யாதவ் 73 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். மும்பை அணியின் பந்துவீச்சில் தனுஷ் கோட்டியன் மற்றும் ஹிம்மன்சு சிங் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : ராகுல் டிராவிட் உடன் ஆடி.. இப்போ அவர் மகன் கூடவும் விளையாடும் 3 இந்திய வீரர்கள்.. தனித்துவ பெருமை
வலிமையான மும்பை அணிக்கு எதிராக தமிழக அணி மிகச் சிறப்பான முறையில் இன்று விளையாடியிருக்கிறது. குறிப்பாக பாபா இந்தரஜித் உள்நாட்டு கிரிக்கெட்டில் எல்லா வடிவத்திலும் மிகச் சிறப்பாக தொடர்ந்து விளையாடி வருகிறார். இவருக்கு இந்திய அணியில் ஒரு வாய்ப்பாவது கொடுக்க வேண்டும் என ஆதரவு குரல்கள் நிறைய உருவாகி இருக்கிறது.