7 விக்கெட் 76 ரன்.. சொல்லி சாதித்த சாய் கிஷோர்.. அகர்கருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்.. புச்சி பாபு 2024

0
851
Kishore

தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவிலான புச்சி பாபு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் பாபா இந்திரஜித் மற்றும் பந்துவீச்சில் சாய் கிஷோர் இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட்டில் ஆரம்ப காலகட்டங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பிறகு அதன் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும் கூட பல மாநில கிரிக்கெட் அணிகளை கொண்டு வந்து விளையாடும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.

- Advertisement -

தமிழ்நாடு – ஹரியானா

இந்த நிலையில் அரியானாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 393 ரன்கள் குவித்தது. இதில் தமிழ்நாட்டு அணியின் பேட்டிங்கில் துவக்க ஆட்டக்காரர் லோகேஸ்வர் 99 ரன்கள், பாபா இந்திரஜித் 167 ரன்கள் குவித்தார்கள்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஹரியானா அணி 218 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. தமிழக அணியின் தரப்பில் பந்துவீச்சில் சாய் கிஷோர் மிகச் சிறப்பாக பந்து வீசி 29.4 ஓவரில் வெறும் 76 ரன்கள் மட்டும் கொடுத்து ஏழு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இந்தநிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடிய தமிழக அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹரியானா அணி இலக்கை நோக்கி விளையாடி தற்பொழுது 10 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருக்கிறது.

சாய் கிஷோர் சவால்

சில நாட்களுக்கு முன்பாக பேசி இருந்த சாய் கிஷோர் தற்போது இந்தியாவில் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக தன்னை உணர்வதாகவும், ஐபிஎல் தொடருக்கு நுழைவதற்கு முன்னால் சிறப்பான பயிற்சி செய்ததைப் போல தற்பொழுது மீண்டும் கடினமான பயிற்சிகளை செய்ய ஆரம்பித்ததால் இந்த உணர்வு தனக்கு கிடைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஃபிளின்டாப் மகன் அறிமுக போட்டியில் அசத்தல் பேட்டிங்.. தடுத்த தமிழக வீரர் சாய் சுதர்சன்.. இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்

மேலும் தான் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருப்பதாகவும், மேலும் துலீப் டிராபியில் ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருப்பது தனக்கு பல வகைகளில் உதவி செய்யும் என்றும் தெரிவித்திருந்தார். அவர் தன் பந்துவீச்சு குறித்து தன்னம்பிக்கையுடன் கூறி இருந்தது போலவே தற்பொழுது செயல்பட்டுக் காட்டி அசத்தி இருக்கிறார்.

- Advertisement -