ஃபிளின்டாப் மகன் அறிமுக போட்டியில் அசத்தல் பேட்டிங்.. தடுத்த தமிழக வீரர் சாய் சுதர்சன்.. இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்

0
2914

லண்டனில் நடைபெற்று வரும் கண்ட்ரி சேம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் போட்டியில் முன்னாள் இங்கிலாந்து வீரரான ஆண்ட்ரூ ஃபிளின்டாப்பின் மகன் ராக்கி ஃபிளின்டாப் தனது அறிமுக முதல் போட்டியில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஆனால் தமிழக வீரர் சாய் சுதர்சன் மேற்கொண்டு அவரை பேட்டிங் செய்ய விடாமல் அவரது செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக அமைந்து வெளியேற்றி இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்தில் உள்ள லண்டனில் கண்ட்ரி சேம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தமாக பத்து அணிகள் பங்குபெறும் இப்போட்டியில் 48வது ஆட்டத்தில் லாங்சிர் மற்றும் சர்ரே அணிகள் மோதின. இதில் சர்ரே அணிக்காக தமிழக வீரரான சாய் சுதர்சன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது.

இதில் லாங்சிர் அணியின் இன்னிங்சை பெல்ஸ் மற்றும் கேப்டன் ஜின்னிங்ஸ் ஆகியோர் தொடங்கினார்கள். இதில் பெல்ஸ் 9 ரன்களில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய போகன்னன் 26 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். மறுபுறம் கேப்டன் ஜின்னிங்ஸ் 12 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ ஃப்ளின்டாப் இன் மகன் ராக்கி ஃப்ளின்டாப் தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார்.

- Advertisement -

64 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து மூன்று பவுண்டரிகளோடு களத்தில் இருந்த போது ஜார்டன் கிளர்க்கின் பந்துவீச்சில் தமிழக வீரமான சாய் சுதர்சனிடம் எதிர்பாராத விதமாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் அறிமுகமான முதல் போட்டியில் 32 ரன்கள் குவித்து இருந்த நிலையில் அவரது முதல் இன்னிங்ஸின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் தனது நேர்த்தியான பேட்டிங்கால் அடுத்த இன்னிங்ஸில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியில் லான்சிர் அணி 58.4 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் தனது முதல் இன்னிங்சில் பறிகொடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிசை துவங்கிய சர்ரே அணி 21.2 ஓவர்களில் 83 ரன்கள் குவித்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் சர்ரே அணி 121 ரன்கள் தற்போது முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:சிஎஸ்கேவுக்கு எதிரா சதம்.. கண்டுகொள்ளப்படாத இந்திய வீரர்.. அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்

இதுவரை ஏழு லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள ராக்கி பிளின்டாப் 7 போட்டிகளில் 177 ரன்கள் குவித்திருக்கிறார். அவரது அதிகபட்ச ரன்கள் 88 ஆகும். 16 வயது ஆல்ரவுண்டர் வீரரான இவர் வலது கை ஃபாஸ்ட் மீடியம் பந்து வீச்சாளரும் ஆவார். எனவே இனி மேற்கொண்டு வரும் போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -