தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வலிமையான மும்பை அணியை இளம் வீரர்கள் கொண்ட தமிழக அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த போட்டியில் மும்பை அணியின் தரப்பில் சூரியகுமார் யாதவ் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் சர்பராஸ் கான் மற்றும் அவருடைய தம்பி முஷீர் கான் என நிறைய அனுபவ மற்றும் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருந்தார்கள்.
தமிழக அணி ஆதிக்கம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிழக அணிக்கு முதல் இன்னிங்ஸில் பூபதி குமார் 82 ரன்கள் எடுத்தார். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. மும்பை அணியின் தரப்பில் ஹிம்மன்சு சிங் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை அணி முதல் இன்னிங்ஸ் 156 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக சுருண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்பராஸ் கான் என மூன்று பெரிய வீரர்களுமே ஏமாற்றினார்கள். தமிழக அணியின் தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இரண்டாவது பகுதியிலும் அசத்தல்
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணிக்கு அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் லோகேஸ்வர் 73 ரன்கள் எடுத்தார். தமிழக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் தரப்பில் தனுஷ் கோட்டியன் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 510 ரன்கள் டார்கெட் கொடுக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு முஷிர் கான் 40 ரன்கள் சாம்ஸ் முலானி 68 ரன்கள் எடுக்க, மும்பை அணி 223 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. சூரியகுமார் யாதவ் கடைசிவரையில் பேட்டிங் வரவில்லை. மேலும் ஸ்ரேயா ஐயர் 22 மற்றும் சர்பராஸ் கான் 0 இருவரும் மீண்டும் ஏமாற்றினார்கள்.
இதையும் படிங்க : 50 வருட அரிய நிகழ்வு.. இங்கிலாந்து பவுலர் அட்கின்சன் அதிரடி சதம்.. லார்ட்சில் மெகா சாதனை.. இலங்கை அணி தடுமாற்றம்
இதைத் தொடர்ந்து தமிழக அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தமிழக அணியின் தரப்பில் சாய் கிஷோர் மீண்டும் மூன்று விக்கெட் கைப்பற்றினார். ஏற்கனவே ஹரியானா அணிக்கு எதிராகவும் தமிழக அணை வெற்றி பெற்று இருந்தது. சூரியகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பவதற்கான முயற்சியில் ஆரம்பக் கட்டம் தோல்வியில் முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.