இந்திய அணி நாளை நியூயார்க் நாசாவ் கவுன்டி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில், 2024 டி20 உலக கோப்பை தொடரில் முதல் போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டிக்கான வானிலை மற்றும் ஆடுகள நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தற்போது போட்டி நடைபெறும் மைதானம் புதிதாக கட்டி திறக்கப்பட்டிருக்கிறது. இதே மைதானத்தில் இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் பயிற்சி போட்டியில் விளையாடியது. மேலும் நேற்று இந்த மைதானத்தில் முதல் சர்வதேச போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த இரண்டு போட்டிகளிலும் கொடுக்கப்பட்டிருந்த ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருந்தது. இந்த ஆடுகளத்தில் எதிர்பார்க்காத ஸ்பாஞ்ச் பவுன்ஸ் இருக்கிறது. மேலும் பந்து அவ்வப்போது ஆடுகளத்தில் ஒட்டி மெதுவாக வருகிறது. மேலும் கண்டிஷன் பந்தை ஸ்விங் செய்ய உதவி செய்கிறது.
இதன் காரணமாக பேட்ஸ்மேன் பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளமாக இருக்கிறது. மேலும் இங்கு உள்ள ஆடுகளத்த தன்மையின் காரணமாக வேகப் பந்துவீச்சு மற்றும் சுழல் பந்து வீச்சு இரண்டுமே எடுபடும். எனவே இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் இதற்கு ஏற்றபடி முடிவுகளை எடுத்திருக்கும்.
மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலை அளிக்கக்கூடிய ஒரு செய்தியாக இந்த போட்டியில் மழை வாய்ப்பு 30 சதவீதம் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே மைதானத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
இதையும் படிங்க : நாளை அயர்லாந்துக்கு எதிராக.. வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 முக்கிய மாற்றங்கள்
இத்தோடு காற்றில் ஈரப்பதம் 55 முதல் 60% இருக்கும். எனவே பந்து ஸ்விங் ஆவது உறுதியானதாக இருக்கிறது. மேலும் வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் முதல் 18 டிகிரி செல்சியஸ் முதல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மழைக்கான வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் ரசிகர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்!