திரும்ப 2023 தப்பை செய்ய மாட்டேன்.. இப்ப மாறிட்டேன்.. என் திட்டங்கள் இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
145
Surya

இந்திய அணி நாளை சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பார்படாஸ், பிரிட்ஜ்டவுன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல முக்கியமான தகவல்களைக் கூறி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களை பொறுத்தவரையில் பந்து திருப்பக் கூடிய அளவிலும், மேலும் பந்து மெதுவாகவும்வரக்கூடிய வகையிலும் இருக்கும். எனவே பேட்ஸ்மேன்கள் இங்கு புத்திசாலித்தனத்துடன் விளையாடுவது முக்கியம். பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி சூரியகுமார் யாதவ் போல இங்கு விளையாடுவது கடினம். சூரியகுமார் யாதவ் இதே போல மெதுவான ஆடுகளத்தை கொண்டிருந்த ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தடுமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்பட்ட பொழுது பதில் அளித்து பேசிய சூரியகுமார் யாதவ் ” விக்கெட்டில் வேகம் இல்லாத பொழுது, உங்களுடைய ஆட்டத்தை ஒருவர் நன்றாக ரீட் செய்யும் பொழுது, உங்களால் சக்தியை உருவாக்கி பந்தை அடித்து விளையாட முடியாது. எனவே அந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய இன்னிங்ஸை எப்படி நீட்டிக்க செய்கிறீர்கள்? என்பது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக்குத் தகுந்தது போல் மாற வேண்டும். மேலும் அணிக்கு என்ன தேவைப்படுகிறது என்பது குறித்து உங்களுடன் இருக்கும் சக பேட்ஸ்மேன் இடம் பேசுங்கள். உங்களைப் அமைதிப்படுத்திக் கொண்டு அடுத்து இன்னிங்சை தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

நான் அமெரிக்காவில் மகிழ்ச்சியாக விளையாடவில்லை என்று கூற முடியாது. நாங்கள் அங்கு முதல் முறை விளையாடுவதால் எங்களுக்கு சூழ்நிலைகள் கொஞ்சம் சவாலாகவும் கடினமாகவும் இருந்தது. ஆனால் நாங்கள் வெஸ்ட் இண்டீசில் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம் எனவே கண்டிஷன் நன்றாக தெரியும்.

இதையும் படிங்க: சூப்பர் 8 சுற்று.. இந்திய அணியில் வெளியேற்றப்பட இருக்கும் முக்கிய வீரர்.. பயிற்சியில் சூசக தகவல்

விக்கெட் ஆரம்பத்தில் விழுந்தால் நான் என் ஆட்டத்தை மாற்றுவேன் என்பது கிடையாது. ஸ்கோர் போர்டில் ரன்கள் தேவைப்படும் பொழுது அதற்காக நாங்கள் விளையாடுவோம். நாங்கள் ஒருவருக்கொருவர் பாசிட்டிவாக இப்படித்தான் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். விக்கெட் விழுந்திருக்கும் நேரத்தில், எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அணி நிர்வாகம் எங்கள் பொறுப்பிலேயே விட்டுவிடும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -