டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். மேலும் கம்பீர் தனது முதல் தொடரில் பயிற்சியாளராக இலங்கை அணிக்கு டி20 தொடரில் இந்திய அணியில் இணைந்தார். இந்த நிலையில் பயிற்சியாளராக கம்பீர் எவ்வாறு செயல்படுகிறார்? என்பது குறித்து சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
கேப்டனாக சூரியகுமார் யாதவ் பயிற்சியாளராக கம்பீர் இருவரும் முதல் முறையாக இணைந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றினார்கள். மேலும் அந்தத் தொடரில் நீண்ட வருடங்கள் கழித்து பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உறவு
கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் இருந்த பொழுதே சூரியகுமார் யாதவ் உடன் நல்லதொடர்பு இருந்தது. மேலும் அவருடைய பேட்டிங் மற்றும் பயிற்சி எப்படி இருக்கும் என கம்பீருக்கு மிக நன்றாக தெரிந்து இருந்தது. எனவே இவர்கள் இருவரும் இந்திய அடியில் இணையும் பொழுது புதிதாக ஆரம்பிக்க எதுவும் இல்லை.
மேலும் கம்பீர் ஒரு பயிற்சியாளராக இருந்தாலும், ஒரு கேப்டன் போல அணியில் தாக்கத்தை செலுத்தக்கூடியவராகவே இருந்து வந்திருக்கிறார். மேலும் அவருக்கு என ஒரு தனிப்பட்ட அணுகுமுறை அணியை மேற்கொண்டு கொண்டு செல்வதில் இருக்கிறது. குறிப்பாகஒரு வீரர் 3 வடிவத்திலும் விளையாடுகிறார் என்றால் அவரால் முடிந்த வரையிலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கம்பீர் நினைக்கக் கூடியவர்.
வீரர்கள் நினைப்பது கம்பீருக்கு தெரியும்
தனது தலைமை பயிற்சியாளர் கம்பீர் பற்றி கேப்டன் சூர்யா குமார் யாதவ் கூறும் பொழுது “கம்பீர் பாய் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய விதம் மிகவும் ஆச்சரியம் அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட ஆட்டத்தையும் புரிந்து கொள்கிறார். மேலும் பயிற்சியின் போது வீரர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது குறித்து அவருக்கு மிக நன்றாக தெரியும்.
இதையும் படிங்க : கோலி அந்தவொரு விஷயத்தை செய்யவே கூடாதுனு சொன்னாரு .. ஆனா அவர் செஞ்சத எதிர்பார்க்கல – ரிங்கு சிங் பேட்டி
அவர் எல்லோருக்கும் ஃப்ரீ ஹேண்டை கொடுத்து இருக்கிறார். நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரே அணியாக வரும் பொழுது எங்களுடைய எண்ணங்களை நாங்கள் பதிவு செய்வது முக்கியமானது ஆகும்.அது அது குறித்த சிந்தனைகளை செய்துவிட்டு நாம் மைதானத்தில் சென்று நாமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.