இந்திய அணி சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு கேப்டன் ஆக திகழ்ந்த ரோகித் சர்மா கேப்டன் பதவியை விட்டு விலகுவது மட்டுமல்லாமல் டி20 ஃபார்மெட்டில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் தற்போது டி20 அணியின் கேப்டன் ஆக திகழ்ந்துவரும் சூரியகுமார் யாதவிற்கு பிறகு நிரந்தர கேப்டனாக இவருக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவின் ஓய்விற்கும் பிறகு தற்போது இந்திய அணியின் டி20 கேப்டனாக நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழு இவரை தற்போதைய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவர் அடுத்த டி20 உலக கோப்பை வரை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் வடிவத்திற்கு தற்போது ரோகித் சர்மாவே அணியின் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் வீரரான சுரேஷ் ரெய்னா சூரியகுமார் யாதவுக்குப் பிறகு இந்திய அணியின் தற்போதைய துணை கேப்டன் ஆக திகழ்ந்து வரும் சுப்மான் கில்லுக்கு அடுத்த இந்திய எதிர்கால கேப்டனாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சுப்மான் கில் ஒரு சூப்பர் ஸ்டார் வீரர். கில் தற்போது துணை கேப்டனாக இருக்கிறார் என்றால் எதிர்காலத்திற்கான தீர்வாக பார்க்கப்படுகிறார். ஐபிஎல் தொடரின் கேப்டனாக திகழ்ந்துவரும் அவர், சிறப்பாக விளையாடி குஜராத் அணியை வெற்றி பெற வைத்தால் அவரே இந்திய அணியின் அடுத்த எதிர்கால கேப்டன் ஆக விளங்குவார். அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருவார்” என்று கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ரிஷப் பந்த் குறித்து சுரேஷ் ரெய்னா கூறும்போது “ரிஷப் பந்த் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார். அவர் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரில் அரை சதம் அடித்திருக்கிறார். மேலும் விக்கெட் கீப்பிங் பணியையும் சிறப்பாக செய்து வருகிறார்” என்று கூறி இருக்கிறார். எனவே கில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக திகழ்வார் என்று சுரேஷ் ரெய்னா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:134% உயர்வு.. மகளிர் டி20 உலக கோப்பை பரிசுத்தொகை அறிவிப்பு.. உலக விளையாட்டு வரலாற்றில் ஐசிசி சாதனை
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதற்கு பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் சந்திக்க இருக்கிறது.