பங்களாதேஷ் டெஸ்ட்ல வேறமாறி பாப்பீங்க.. விராட் அந்த பவுலருக்கு எதிராவே தான் யாருனு காமிச்சிருக்காரு – ரெய்னா பேட்டி

0
95
Suresh raina and virat kohli

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் திரும்பியிருப்பது ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தனது சொந்த பிரச்சினைகளின் காரணமாக அதிலிருந்து விலகிய விராட் கோலி அதற்குப் பிறகு எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதற்குப் பிறகு இந்திய அணி பெரும்பாலும் வெள்ளை பந்து கிரிக்கெட் வடிவ தொடர்களில் விளையாடியதால் நீண்ட காலம் கழித்து தற்போது ரெட்பால் கிரிக்கெட் தொடரை மீண்டும் விளையாட உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு இன்னும் 10 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் இந்த போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் உழைப்பில் இருக்கும். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விராட் கோலி மீண்டும் ரெட்பால் கிரிக்கெட்டிற்கு திரும்புவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரெய்னா விரிவாக கூறும்போது “ரோகித் சர்மா ஒரு அற்புதமான சிறந்த கேப்டன். இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அதை முழுவதுமாக நிரூபித்தார். ஆனால் இனி தற்போது விராட் கோலி ரெட் பால் கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் கவனம் செலுத்தப்படும். அவர் டெஸ்ட் போட்டியை மிகவும் மதிக்கத்தக்க வீரர். அவற்றை நேசிப்பதோடு மிகுந்த மரியாதையும் கொடுப்பார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா அணி இன்னும் பத்து போட்டிகளில் விளையாடும்.

இந்த டெஸ்ட் சுழற்சியில் விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். விராட் கோலி எப்போது அழுத்தத்தின் கீழ் வளர்கிறார். மேலும் இந்த டெஸ்ட் சீசனின் முழுவதும் விராட் கோலியை ஒரு அதிரடி மையத்தில் பார்க்கும். வங்கதேச அணியில் அதிரடி பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர் ஆனால் விராட் கோலி ஹாரிஸ் ராப் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

இதையும் படிங்க:என் டீம்ல அந்த பிளேயர் திறமைய வெளிய கொண்டு வருவேன்.. அதுதான் டார்கெட் – ரோகித் சர்மா உறுதி

சவால்கள் விராட் கோலியை எப்போதும் உயர்த்துகின்றன. மேலும் சவால்கள் மூலமாக அவர் மேலும் பிரகாசிப்பார் என்று நம்புகிறேன்” என ரெய்னா கூறி இருக்கிறார். இந்திய அணி அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகள் மட்டும் விளையாட இருப்பதால் விராட் கோலியின் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -