நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் இருக்கும் ஒரு வீரரின் திறமையை வெளியில் கொண்டு வர வேண்டியது தமது கடமை என கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா நிறைய விஷயங்கள் குறித்து மிகவும் வெளிப்படையான முறையில் வழக்கம் போல் பேசி இருந்தார். இந்திய அணியை வெல்ல வேண்டும் என்கின்ற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது, இந்தியாவிற்கு வரக்கூடியவர்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். ஆனால் இங்கிலாந்துக்கு என்ன நடந்தது? என்பதை பார்த்தோம் என்று பங்களாதேஷ் தரப்புக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
அவரின் தரம் எல்லோருக்கும் தெரியும்
இந்த நிலையில் கேஎல்ராகுல் பற்றி பேசி இருக்கும் ரோகித் சர்மா “உலக கிரிக்கெட்டில் ஒரு சிலரே மிகவும் சுலபமாக விளையாடியிருக்கிறார்கள். சிலர் மட்டுமே எந்த பிரச்சனையும் இல்லாமல் முடித்திருக்கிறார்கள். ஆனால் மற்றபடி உலக கிரிக்கெட்டில் ஒவ்வொருவருக்குமே பிரச்சினைகள் இருந்திருக்கிறது. பயணம் சுமுகமாக இருந்ததில்லை. ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்தன. நீங்கள் உங்களைப் பற்றியும், உங்களிடம் எதிர்பார்ப்பதை பற்றியும், அணிக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்”
கே.எல்.ராகுல் இடம் இருக்கும் தரம் பற்றி எல்லோருக்குமே தெரியும்.எங்கள் தரப்பிலிருந்து அவருக்கு சொல்லப்படும் செய்தி என்னவென்றால், அவர் எல்லா போட்டியையும் விளையாட வேண்டும், அவரது சிறந்ததை வெளியில் கொண்டு வர வேண்டும். அவரிடமிருந்து சிறந்ததை கொண்டு வர வேண்டியது நம்முடைய கடமையும் ஆகும்” என்று கூறியிருக்கிறார்.
அவர் வளராததற்கு எந்த காரணமும் இல்லை
மேலும் பேசிய ரோகித் சர்மா “நீங்கள் அவரிடமிருந்து என்னை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக அவருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர் திரும்பி வந்ததிலிருந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்தார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 80 ரன்கள் எடுத்தார். பிறகு காயம் அடைந்து துரதிஷ்டவசமாக விளையாட முடியாமல் வெளியேறினார்”
இதையும் படிங்க : நாளை முதல் டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங XI.. சென்னையில் சிறப்பு வியூகம்.. சர்ப்ரைஸ் அறிமுகம் நடக்குமா?
“அவரிடம் பேசும் போது அவருக்கு ஒவ்வொரு முறையும் தெளிவான செய்தியை கொடுக்க வேண்டியது அவசியம். இதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். ஹைதராபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விட்டு சென்ற இடத்திலிருந்து அவர் தொடர்வார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் ஸ்பின் மற்றும் வேகப்பந்துவீச்சை சிறப்பாக விளையாடும் திறமையை பெற்றிருக்கிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வளர முடியாத அதற்கு எந்த காரணமும் இல்லை. தனது வாழ்க்கையை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறார் என்று புரிந்து கொள்வது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.