இங்கிலாந்தில் முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் லீக் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன. இந்த தொடரில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டதற்கு அவர் வியப்பான பதில்களை அளித்திருக்கிறார்.
நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 153 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்கின்ற நிலையில், கடைசிப் பந்தில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்து வருகிறார். மேலும் இந்த அணியில் பிரபல முன்னாள் இந்திய வீரர்கள் ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா இர்ஃபான் பதான் யூசுப் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் போன்றோர் விளையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த தொடரின் மத்தியில் சுரேஷ் ரெய்னாவிடம் சில வேடிக்கையான மற்றும் வித்தியாசமான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அதிகம் யோசிக்காமல் உடனுக்குடன் பதில் தந்து ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
சுரேஷ் ரெய்னாவிடம் முதல் கேள்வியாக டெத் ஓவர்களில் சிறந்த பவுலர் யார் என்று கேட்கப்பட்டது அவர் பும்ராவை தேர்வு செய்தார். அடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடும் வீரர் யார் என்ற கேள்விக்கு மைக்கேல் ஹசியை கூறினார். இதற்கு விராட் கோலியை கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : 124 ரன்.. பாண்டிங்கின் வாஷிங்டன் அணி அபார வெற்றி.. சிஎஸ்கேவின் டிஎஸ்கே புள்ளி பட்டியலில் பின்னடைவு.. எம்எல்சி 2024
இதற்கு அடுத்து வேடிக்கையான கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு ஹர்பஜன் சிங்கை தேர்ந்தெடுத்தார். அடுத்து மிக எளிதாக ரன் மெஷின் யார் என்ற கேள்விக்கு விராட் கோலியை தேர்ந்தெடுத்தார். இதற்கு அடுத்து எல்லா காலத்திலும் சிறந்த கோட் வீரர் யார் என்ற கேள்விக்கு யோசிக்காமல் மகேந்திர சிங் தோனி என பதிலளித்தார். தோனி மீது சுரேஷ் ரெய்னா எப்பொழுதும் மிகப்பெரிய மதிப்பை வைத்திருப்பதை பல இடங்களில் நிரூபித்து வருகிறார்!






