சிஎஸ்கே பாணியில் அபிஷேக் சர்மாவை வீழ்த்த பிளான்.. திட்டம் சொதப்ப.. கேப்டனே களத்தில் இறங்கி செய்த சம்பவம்

0
126

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 33வது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான பந்து வீச்சினால் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா போட்ட திட்டம்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய சன் ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் மிகப்பெரிய இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயிக்க களத்தில் இறங்கியது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்றாவது ஓவரை வீசி வந்த தீபக் சகார் இந்தப் போட்டியில் முதல் ஓவரையே வீச ஆரம்பித்தார்.

இவரை சிஎஸ்கே அணி எப்போதுமே தொடக்க ஓவரை வீசவைத்து 13 விக்கட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அதே பார்முலாவை கேப்டன் ஹர்திக் பாண்டியா அபிஷேக் சர்மாவுக்கு எதிராக பயன்படுத்தினார். எதிர்பார்த்தபடியே திட்டம் அவருக்கு கை கொடுத்த நிலையில் முதல் பந்திலையே கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப் திசையில் நின்ற வில் ஜாக்ஸ் தவறவிட்டார். அதற்குப் பிறகு நான்காவது பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் மிட் விக்கெட் திசையை நோக்கி அடிக்க அங்கே ஃபீல்டராக நின்று கொண்டிருந்த கரன்சர்மா அந்த வாய்ப்பையும் தவற விட்டார்.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழப்பு

அதற்குப் பிறகு ஆட்டத்தின் மூன்றாவது ஓவர் வீசிய தீபக் சகார் 5வது பந்தில் மீண்டும் மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த கரண் சர்மாவிடம் மீண்டும் கேட்ச் வாய்ப்பை கொடுக்க, அதையும் கரன்சரமா எடுக்க தவறி கையில் காயம் அடைந்தார். அதற்குப் பிறகு அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட அபிஷேக் ஷர்மா 28 பாண்டுகளில் 7 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச வந்தார்.

இதையும் படிங்க:6 மேட்ச் 5 வெற்றி சும்மா வரல.. ஒரு கேப்டனா எனக்கு இந்த விஷயம் வேணும்.. அப்பதான் அணியில் இடம் – அக்சார் பட்டேல் பேட்டி

ஷார்ட் பிட்ச் ஆக வீசிய பந்தை ஸ்வீப்பர் கவர் திசையை நோக்கி அடித்த அபிஷேக் ஷர்மா ராஜ் பவாவின் கைகளில் கேட்ச் ஆக தஞ்சம் அடைந்தார். இதுவரை கொடுத்த வாய்ப்புகளை மும்பை ஃபீல்டர்கள் தவறவிட இறுதியாக தானே பந்துவீசி அபிஷேக் ஷர்மாவின் விக்கட்டையும் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். தற்போது வரை சன்ரைசர்ஸ் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

- Advertisement -