நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் டி20 லீக் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சார் பட்டேல் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சிறப்பாக விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரை பொருத்தவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி அசைக்க முடியாத அணியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழக கோச் ஹேமங் பதானி நியமிக்கப்பட்டதை அடுத்து கடந்தாண்டு நடைபெற்ற மெகா ஆக்ஷனில் தரமான வீரர்களை ஏலத்தில் எடுத்து அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்தது. அதுவரை ஒரு ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்த அக்சார் பட்டேல் தற்போது முதல் முறையாக கேப்டனாக அறிமுகமானார்.
முதல் போட்டியில் இருந்தே தனது அற்புதமான கேப்டன் திறமையை வெளிப்படுத்தி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்திருந்தாலும் 6 போட்டிகளில் 5ல் வெற்றி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் அணியை அமர வைத்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு கேப்டனாக என்னென்ன விஷயங்கள் தான் பார்ப்பேன் என்று அக்சார் பட்டேல் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
அக்சார் பட்டேல் பேட்டி
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் ஏற்கனவே மாநில கிரிக்கெட்டுக்கு கேப்டனாக இருந்திருக்கிறேன். எனவே என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து எனக்கு தெரியும். நீங்கள் விரும்பும் விதத்தில் அணியை வழிநடத்தவும், விரும்பும் விதத்தில் விளையாடவும் வாய்ப்பு கிடைக்கும் போது அதை ஏன் முயற்சி செய்து பார்க்க கூடாது? நான் சரி என்று நினைப்பதை செய்கிறேன். கேப்டனுக்கான ஒரு டெம்ப்ளேட்டை நான் எப்போதும் பின்பற்றுவது இல்லை.
இதையும் படிங்க:ஓபனா சொல்றேன்.. பஞ்சாப் அணியில் சின்ன தப்பு செய்யும் சுதந்திரம் கூட எனக்கு இல்லை.. காரணம் இதுதான் – அர்ஸ்தீப் சிங் பேட்டி
ஒரு கேப்டனிற்கான திட்டமிடல் இருக்கிறது. எதிர் அணி எப்படி விளையாடும், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு திட்டத்தை நான் எப்போதும் வைத்திருப்பேன். ஆனால் ஒரு கேப்டனாக வீரர்களின் பார்ம் எப்படி இருக்கிறது அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? அவர்களுடைய நாள் எப்படி இருக்கிறது, அவர்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதில் நான் எப்போதும் கவனம் கொள்வேன். நான் சூழ்நிலைக்கு ஏற்ப மட்டுமே வீரர்களை தேர்வு செய்வேனே தவிர அடிப்படை தரவுகளைக் கொண்டு தேர்வு செய்பவன் அல்ல” என்று அக்சார் பட்டேல் கூறி இருக்கிறார்.