இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதம் முதல் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பார்டர் கவாஸ்கர் ட்ராபி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை வழக்கமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடர்கள்தான் ரசிகர்களிடையே பெரும்பாலும் கவரப்படும். ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர்கள்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே அதிக கவனமும், வரவேற்பும் பெற்று வருகிறது. அதிலும் இந்த இரண்டு அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் பரபரப்பு இன்னமும் உச்சமாக இருக்கும்.
இந்திய அணி குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்றுள்ளது. அந்நிய மண்ணில் சென்று இரண்டு முறை கோப்பையை வென்று வரலாறு படைத்ததால் மூன்றாவது முறையும் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார்.
இந்த தொடர் குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுள்ளதாலும் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை வலுவில்லாமல் காணப்படுவதாலும் வெற்றி பெறுவதற்கு சிக்கலில் மாட்டி இருப்பதாக தெரிகிறது. செனா நாடுகளில் இந்தியா எப்போதுமே மெதுவான தொடக்கத்தை பெறுவது முதல் டெஸ்டில் முக்கிய பங்கு வகிக்கும். அதற்கு முன்னர் அவர்கள் முதல் தர கிரிக்கெட்டில்சரியாக விளையாடும் வாய்ப்பு அமைந்திருக்காது.
அதேபோல டெஸ்ட் போட்டிகளில் ஒரு வார இடைவெளியில் அவர்களுக்கு எதிராக வேலை செய்யக்கூடும். மேலும் டெஸ்ட் தொடர்களுக்கு இந்திய வீரர்கள் தயாராகும் விதத்தை பார்க்கும்போது இன்றைய சுற்றுப்பயண அட்டவணைகள் இப்படித்தான் இருக்கின்றன. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஜெய்ஸ்வாலுக்கு நிகழ்ந்தது போல அனுபவம் இல்லாத புது முகங்களுக்கு இது கடினமாக இருக்கும்.
இதையும் படிங்க:லெஜண்ட்ஸ் கிரிக்கெட் 2024.. எந்த அணியுமே வாங்காத 3 பிரபல இந்திய வீரர்கள்.. முன்னாள் சிஎஸ்கே வீரரும் இல்லை
மேலும் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 700 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். இரு தரப்பிலும் இருக்கும் திறமையுடன் டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டின் அபிமான வடிவமாக ஏன் இருக்கிறது என்பதை காட்டும்.மேலும் எனது கணிப்பு இந்தியாவுக்கு 3-1 என்ற கணக்கில் அமையும்” என்று கூறி இருக்கிறார்.