இந்திய அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடர் இந்திய அணிக்கு எளிதானதாக இருக்காது என சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டும் பொழுது பங்களாதேஷ் அணி தற்போது பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்றது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இந்திய அணி அவர்கள் நாட்டுக்கு சென்று விளையாடிய போதும் கடுமையான சண்டை செய்தது என கூறியிருக்கிறார். இதன் காரணமாக இந்த தொடர் எளிதானதாக இந்திய அணிக்கு அமையாது என்றும் கூறியிருக்கிறார்.
பங்களாதேஷ் அணி சாதாரணமானது இல்லை
இந்திய அணி அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது இதில் குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஆவது வென்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சுட்டிக்காட்டி சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” பாகிஸ்தானில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை பங்களாதேஷ் அணி வீழ்த்தி தாங்கள் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மேலும் இந்திய அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த பொழுது அவர்கள் கடுமையான போட்டியை கொடுத்தார்கள்.தற்போது பாகிஸ்தான அணியை வீழ்த்தி இருப்பதன் மூலமாக இந்திய அணியை வீழ்த்த தயாராக இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு நடந்தது நடக்கலாம்
மேலும் இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “அவர்களது அணியில் சில சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் நம்பிக்கை தரக்கூடிய புதிய வீரர்கள் வந்திருக்கிறார்கள். இது சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களது ஆரம்ப நிலையை வகைப்படுத்துகிறது. அவர்களை எதிர்த்து விளையாடும் பொழுது ஒவ்வொரு அணியும் பாதுகாப்பாக இருந்து விட முடியாது. பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது போல இந்திய அணியும் அவர்கள் வீழ்த்தலாம்”
இதையும் படிங்க : நாங்க சொல்றோம்.. அடுத்த விராட் கோலியா இந்த பையன்தான் வருவார் – ஆஸி 4 வீரர்கள் கணிப்பு
“இந்தியாவுக்கு அடுத்த நான்கு மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. இதில் குறைந்தது ஐந்து போட்டிகளை வென்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் அடுத்து வரக்கூடிய எந்த டெஸ்ட் தொடரும் இந்திய அணிக்கு எளிமையானதாக இருக்காது. நாம் அற்புதமான கிரிக்கெட்டின் ஒரு கோடைக்காலத்தில் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.