இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து சிறந்த பேட்ஸ்மேன்களை கண்டறிவது கடினம் எனவும் அதற்கான காரணம் குறித்தும் இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களில் நிறைய வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில்தான் சுனில் கவாஸ்கர் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து சிறந்த பேட்ஸ்மேன்களை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கண்டறிவது கடினமான வேலை எனக் கூறியிருக்கிறார்.
துலீப் டிராபி 2024
பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சுப்மன் கில், சர்பராஸ் கான் ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், யாஸ் தயால், அக்சர் படேல், ஆகாஷ் தீப், ரிஷப் பண்ட், துருவ் ஜுரல் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் விளையாடினார்கள்.
அதே சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் விளையாடவில்லை. மேலும் முகமது சிராஜ் துலீப் டிராபியில் தேர்வாகி இருந்தாலும் கூட விளையாடும் அணியில் இடம்பெறவில்லை. பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் மட்டுமே கலந்து கொண்டு விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல பேட்ஸ்மேன்களை கண்டுபிடிக்க முடியாது
இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்த நேரத்தில் எல்லா சிறப்பான இந்திய பந்துவீச்சாளர்களுக்கும் ஓய்வு கொடுத்து விட்டதால், உள்நாட்டு கிரிக்கெட்டில் நல்ல பேட்ஸ்மேன் யார்? என்பதை கண்டுபிடிப்பது கடினமான வேலையாக மாறிவிடுகிறது. ஏனென்றால் அந்த விளையாடும் பேட்ஸ்மேன்கள் இரண்டாம் கட்ட பந்துவீச்சாளர்களை சந்தித்து விளையாடுகிறார்கள். இதன் காரணமாக நல்ல பேட்ஸ்மேன் யார் என்பதை கண்டறிவது கடினமாகிவிடுகிறது.
இதையும் படிங்க : விராட் பாய் என்னை தலை வணங்கினார்.. டீம் மீட்டிங்ல அவர் பேசுற இந்த விஷயம்தான் கோல்ட் – சர்பராஸ் கான் பேட்டி
இந்திய கிரிக்கெட் வலுவாக இருக்க வேண்டும் என்றால் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும். இந்திய தேசிய அணிக்காக விளையாட கூடியவர்கள், ரஞ்சி உள்நாட்டு டெஸ்ட் தொடரில் சில குறிப்பிட்ட போட்டிகளுக்கு கிடைக்கும் படி அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு அவர்கள் பங்கு எடுக்க வேண்டும். இல்லையென்றால் விடியல் தவறானதாகத்தான்” இருக்கும் என்று கூறியிருக்கிறார்.