விராட் பாய் என்னை தலை வணங்கினார்.. டீம் மீட்டிங்ல அவர் பேசுற இந்த விஷயம்தான் கோல்ட் – சர்பராஸ் கான் பேட்டி

0
59
Virat

இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீர சர்பராஸ் கான் மூத்த நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் 5 இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்களுடன் 200 ரன்கள் எடுத்து மீண்டும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

- Advertisement -

முதல்முறையாக விராட் கோலி உடன் சர்ப்ராஸ் கான்

கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக விளையாடவில்லை என்பதால் சர்பராஸ் கான் முதல்முறையாக விராட் கோலியுடன் இணைந்து இந்திய அணியில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் ஆரம்ப காலகட்டத்திலேயே ஆர் சி பி அணியில் விராட் கோலி உடன் இணைந்து விளையாடிவிட்டார்.

அடுத்தடுத்து இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கின்ற காரணத்தினால் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்று இருக்கும் எல்லா வீரர்களும் தங்கள் இடத்தை உறுதி செய்ய சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இளம் வீரராக இருப்பதால் சர்பராஸ் கான் கட்டாயம் நல்ல முறையில் செயல்பட்டால் மட்டுமே அடுத்த தொடருக்கு தேர்வு செய்வார்கள் என்பதால் நெருக்கடி அதிகம் இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி என்னை தலை வணங்கினார்

இந்த நிலையில் விராட் கோலி குறித்து பேசி இருக்கும் சர்பராஸ் கான் கூறும் பொழுது “விராட் பாயின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் நிகரற்றது. போட்டிக்கு முன்பாக நடைபெறும் அணி கூட்டங்களில் குறிப்பிட்ட அணியின் பந்துவீச்சாளருக்கு எதிராக எப்படி அவர் எத்தனை ரன்கள் எடுத்தார் என்று எங்களுக்கு கூறுவார். அனைவருக்கும் முன்னால் இப்படி பாசிட்டிவாக எழுந்து நின்று பேசுவதும், அடுத்த நாளே அதை களத்தில் சென்று செய்து காட்டுவதும் அவருடைய தனித்திறமை ஆகும்”

“நான் அவரை முதன்முறையாக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் தான் சந்தித்தேன். அப்பொழுது ஆர்சிபி அணிக்காக ஒரு போட்டியில் 21 பந்தில் 45 ரன்கள் எடுத்திருந்தேன். அவர் அன்று எனக்கு தலைவணங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். அன்றைய நாள் நான் மிகவும் வேடிக்கையாக இருந்தேன். அவருடன் ட்ரெஸ்ஸிங் ரூம் ஐ பகிர்ந்து கொள்வது எனக்கு ஒரு கனவாக இருந்தது.அவருடன் எதிர்காலத்தில் இணைய வேண்டும் என்கின்ற என் கனவு நனவாகி இருக்கிறது”

இதையும் படிங்க : பாபர் அசாம் செய்த காரியம்.. நைட்டு தூக்கமே வரல.. திரும்ப திரும்ப பார்த்தேன் – பாகிஸ்தான் தகானி பேச்சு

“விராட் பாய் தன்னுடைய விளையாட்டில் தெளிவாக இருக்கிறார். ஒரு வீரராக தான் என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அவருக்கு மிக தெளிவாக தெரியும். மேலும் பாராட்டோ அல்லது விமர்சனமோ விளையாட்டை பாதிக்க கூடாது என்று கூறுவார். காலை மதியம் மாலை இரவு என தான் செய்ய வேண்டிய வேலைகளை தான் செய்ய வேண்டும், இரவில் சரியாக போய் தூங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். இந்த விஷயங்களை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -