ஆஸி டூர்ல பிசிசிஐ பிளான் மோசமானது.. ஓய்வு எடுக்கவா அங்க போறிங்க? உடனே மாத்துங்க – கவாஸ்கர் அதிருப்தி

0
56
Gavaskar

இந்திய அணி நவம்பர் மாதம் இறுதியில் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா செல்கிறது. இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பயிற்சி போட்டி தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை அதிவேக ஆடுகளமான பெர்த் மைதானத்தில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்து அடிலெய்டில் பகல் இரவு டெஸ்ட் போட்டி விளையாடுகிறது. இந்த முதல் இரண்டு போட்டிகளுமே இந்திய அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணிக்கு இரண்டாவதாக நடைபெறும் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பயிற்சி போட்டியில் நான்கு நாட்களில் இருந்து இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவும் பயிற்சி போட்டிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

ஏற்கனவே இந்தியா ஆஸ்திரேலியா அவர்கள் நாட்டில் வைத்து இரண்டு முறை தொடர்ந்து டெஸ்ட் தொடரில் தோற்கடித்திருப்பதால் அவர்கள் திருப்பி கொடுப்பதற்கு பல வழிகளில் தயாராகி வருகிறார்கள். இப்படியான நிலையில் எந்த வித பயிற்சியும் இல்லாமல் நேரடியாக ஆஸ்திரேலியாவில் விளையாடுவது தோல்வியில் முடியும் என கவாஸ்கர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணியுடன் போட்டி வழக்கம்போல் இல்லாமல் இரண்டு நாட்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கிறது. இதை எதை உணர்த்துகிறது என்றால் சீனியர் வீரர்களுக்கு முழுதாக ஓய்வு கொடுக்கப் போகிறார்கள். மேலும் இளம் வீரர்களுக்கு இதை விட நல்ல பயிற்சியை முதல் தர ஆட்டத்தில் கொடுக்கும் முடியும். எல்லாவற்றுக்கும் இந்திய அணி அங்கு கிரிக்கெட் விளையாட செல்கிறது ஓய்வு எடுக்க கிடையாது.

இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயரோட 12 பேர் வேணாமா?.. ஆனா எனக்கு 13 பேர் ஆடனும்.. காரணம் இதுதான் – அஸ்வின் விருப்பம்

ஆஸ்திரேலியர்கள் இந்திய அணியை பழிவாங்கும் தாகத்தில் இருக்கிறார்கள். அங்கு மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இந்திய அணி கூர்மையாக இருக்க வேண்டும். இரண்டு நாள் போட்டியை மூன்று நாள் போட்டியாக மாற்றி இளம் வீரர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்க இன்னும் நேரம் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியனுக்கு எதிராக நீங்கள் இதை செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -