இந்த ஆண்டு துலீப் டிராபி அடுத்து செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. இந்திய அணியின் நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் சீசனுக்கு இந்தத் தொடர் தயாராவதற்கு மிகவும் உதவியாக அமைகிறது. அதே சமயத்தில் இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடாதது சரியானது இல்லை என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபி இந்த முறை நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என ஐந்து இந்திய நட்சத்திர வீரர்கள் தவிர்த்து மற்ற அனைவருமே இந்த தொடரில் விளையாடுகிறார்கள்.
இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்கின்ற பேச்சு உருவான பொழுது, கட்டாயம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்கள் என்று பரவலாக பேசப்பட்டது. இப்படியான நிலையில் இந்த இரண்டு நட்சத்திர இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் நீண்ட ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து கருத்து விளக்கம் அளித்திருந்த ஜெய் ஷா தங்களின் மதிப்புமிக்க மூத்த பேட்ஸ்மேன்களை மரியாதையுடன் நடத்த விரும்புவதாகவும், மேற்கொண்டு அவர்கள் விளையாடும் பொழுது காயமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவர்கள் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும்பொழுது “இந்தியத் தேர்வுக்குழு துலீப் டிராபிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்யவில்லை. எனவே இந்த இரண்டு இந்திய முக்கிய பேட்ஸ்மேன்களும் எந்தவித பயிற்சியும் இல்லாமல் நேராக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு செல்வார்கள்.
ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒருவரின் பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டியது அவசியம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்திருக்க முடியும். ஒரு வீரர் முப்பது வயதை எட்டும் பொழுது, அவர் இதுவரையில் நிர்ணயித்திருந்த உயர்தர விளையாட்டை மீண்டும் தொடர இப்படியானபோட்டிகளில் விளையாடுவது அவசியம்.
இதையும் படிங்க :கேகேஆர் கழட்டிவிட்டால்.. இந்த அணிக்காக ஆட விரும்பறேன்.. என்னை செலக்ட் செய்யாதது சரிதான் – ரிங்கு சிங் விருப்பம்
ஒரு வீரர் நீண்ட ஓய்வை எடுக்கும் பொழுது அவருடைய மஸல் மெமரி பலவீனம் அடைகிறது. மேலும் முன்பு இருந்த சிறப்பான நிலைக்கு மீண்டும் திரும்பி செல்வது கடினமான ஒரு விஷயமாக மாறிவிடுகிறது” என்று சுனில் கவாஸ்கர் தன் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.