இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் பினிஷராக ரிங்கு சிங் மிகவும் திறமையானவராக தனிப்பட்ட முறையில் ரசிகர்களைகொண்டவராக இருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி தன்னை தக்கவைக்காவிட்டால் எந்த அணிக்கு விளையாட விருப்பம் என்று கூறியிருக்கிறார்.
ரிங்கு சிங் இந்திய அணிக்காக அறிமுகமாகி நேற்றுடன் ஒரு ஆண்டு முடிவடைந்தது. இந்த காலகட்டத்தில் இந்திய டி20 அணிக்கு ஒரு ஃபினிஷர் ஆக அவர் அபாரமான முறையில் செயல்பட்டிருக்கிறார். ஆட்டத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்வது, பதட்டப்படாமல் இருப்பது, பெரிய ஷாட்களை சரியான நேரத்தில் விளையாடுவது என தனி ரசிகர் கூட்டத்தை தனக்கு சிறிய காலத்திலேயே உருவாக்கி இருக்கிறார்.
மேலும் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பினிஷராக கட்டாயம் ரிங்கு சிங் இந்திய அணியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு நான்கு ஸ்பின்னர்களை தேர்வு செய்து ரிங்கு சிங்கை கழட்டிவிட்டது. அவர் ரிசர்வ் வீரராக வெஸ்ட் இண்டீஸ் சென்றார்.
மேலும் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் பேட்டிங் செய்வதற்கான சூழ்நிலை அவருக்கு அமையவில்லை. இத்தோடு தற்பொழுது துலீப் டிராபிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு அணிகளிலும் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இந்த விஷயங்கள் குறித்து அவர் தற்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை தவிர்த்து எந்த அணிக்கு விளையாட விரும்புகிறீர்கள் என ரிங்கு சிங்கிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய ரிங்கு சிங் “ஆர்சிபி ஏனென்றால் அங்கு விராட் கோலி பையா இருக்கிறார்” என்று தன் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்கா டி20.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 2 முக்கிய மாற்றம்.. அதிரடி அணி களம் இறங்குகிறது
அதே சமயத்தில் துலீப் டிராபியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கேட்கப்பட்ட பொழுது பதில் அளித்த ரிங்கு சிங் “உண்மையில் நான் பல ரஞ்சி போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை. நான் இரண்டு மூன்று போட்டிகளில் மட்டுமே குறிப்பிடும்படி விளையாடினேன். நான் சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாகத்தான் நான் தேர்வு செய்யப்படவில்லை. இனி அடுத்து வரும் போட்டிகளுக்கு நான் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உண்டு என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.