உலகக் கிரிக்கெட்டில் அமைதிக்கு பெயர் போன மகேந்திர சிங் தோனியும் கோபப்படுவார் என, அவருடைய தலைமையில் இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியில் விளையாடி இருக்கும் தமிழக மற்றும் இந்திய முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி கோபப்பட்டு பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் அப்படியான நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும், அந்த நேரத்தில் மகேந்திர சிங் தோனியை யாராலும் நேருக்கு நேராக பார்க்க முடியாது எனவும் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனியின் ஆக்ரோஷம்
தோனி களத்தில் எப்பொழுதும் கோபப்படவே மாட்டார். அவருடைய கோபம் வீரர்களை பாதித்து செயல்பாட்டை குறைத்து விடும் என்கின்ற காரணத்தினால் எந்த உணர்வையும் வெளிக்காட்ட மாட்டார். மற்றபடி ஒரு வீரர் மிகவும் மோசமான முறையில் செயல்பட்டால் மட்டுமே கூப்பிட்டு ஆலோசனையை கண்டிப்பான முறையில் சொல்வார்.
மேலும் ஓய்வறையிலும் தோனி கோபப்பட்டு பார்ப்பது அரிதானது. இதன் காரணமாக தோனி கோபப்பட்டால் எப்படி இருக்கும் என பலருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த நிலையில் அவருடன் இணைந்து விளையாடி இருக்கும் சுப்பிரமணியம் பத்ரிநாத் தோனி கோபப்பட்ட ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார்.
கடவுளே அவரைப் பார்க்க முடியலை
இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “மகேந்திர சிங் தோனியும் ஒரு மனிதர்தான், அவரும் கோபப்பட செய்வார். ஆனால் களத்தில் அவர் கோபப்பட மாட்டார். ஏனென்றால் தன்னுடைய நிதானத்தை இழந்து விட்டதாக எதிரணிக்கு காட்டிக்கொள்ள அவர் விரும்ப மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் நாங்கள் 110 ரன்களை துரத்திக் கொண்டிருந்தோம். ஆட்டத்தில் ஒரு பகுதியில் நிறைய விக்கெட்டுகளை இழந்து நாங்கள் தோல்வியடைந்தோம்”
“நான் அனில் கும்ப்ளே வந்து வீச்சில் ஒரு லேப் ஷாட் விளையாடி எல்பிடபிள்யு ஆனேன். பிறகு நான் டிரெஸ்ஸிங் ரூமில் நின்று கொண்டிருந்தேன்.அப்பொழுது அவர் உள்ளே வந்து கொண்டிருந்தார். அங்கு ஒரு வாட்டர் பாட்டில் கிடந்தது. கோபத்தில் அதை அவர் எட்டி உதைத்தார். அந்த நேரத்தில் கடவுளே என்ன இது என்பது போல இருந்தது”
இதையும் படிங்க : பங்களாதேஷில் தெருவுக்கு 3 பேர் இருப்பாங்க.. 100க்கு சமம் அத விராட் மிஸ் பண்ணிட்டார் – தமிழக வீரர் பத்ரிநாத் விமர்சனம்
“எங்களிடம் அவர் எதுவுமே பேசவில்லை. எங்களால் அவருடைய முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. அதே சமயத்தில் அவர் இது குறித்து எதுவுமே எங்களிடம் பேசாமல் சென்று விட்டார். மேலும் இது குறித்து அணி கூட்டமும் நடக்கவில்லை. அது அத்தோடு முடிந்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.