பங்களாதேஷில் தெருவுக்கு 3 பேர் இருப்பாங்க.. 100க்கு சமம் அத விராட் மிஸ் பண்ணிட்டார் – தமிழக வீரர் பத்ரிநாத் விமர்சனம்

0
186
Virat

இந்திய ரன் மிஷின் விராட் கோலிக்கு இடது கை சுழல் பந்துவீச்சாளர்களிடம் இருக்கும் தடுமாற்றம் குறித்து தமிழக மற்றும் இந்திய முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டு விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்த நிலையில் விராட் கோலி கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர்களது நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலியின் பலவீனம்

இந்த நிலையில் விராட் கோலிக்கு இருக்கும் தனிப்பட்ட பேட்டிங் பலவீனம் குறித்து பேசி இருக்கும் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “நடப்பு துலீப் டிராபியில் விராட் கோலி விளையாடி இருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். பங்களாதேஷ் அணி சுழல் பந்துவீச்சில் சிறந்த அணி என்று நமக்கு நன்றாக தெரியும். மேலும் பங்களாதேஷில் ஒவ்வொரு தெருவிலும் மூன்று பேருக்கு ஒருவர் இடதுகை சுழல் பந்து வீசக்கூடியவராக இருப்பார்”

“எனவே இந்த முறை பங்களாதேஷ் நிச்சயமாக இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களுடன் வருவார்கள். எனவே இந்த இடத்தில் தான் துலீப் டிராபியில் விராட் கோலி ஒரு போட்டியில் விளையாடியிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு போட்டியில் விளையாடுவது 100 ப்ராக்டிஸ் செஷன்களுக்கு சமம்”

- Advertisement -

கிரிக்கெட் நிபுணரா சொல்றேன்

“இந்த இடத்தில் ஒரு கிரிக்கெட் நிபுணர் போல அவரை நான் பார்க்க விரும்புகிறேன். துலீப் டிராபியில் விளையாடியிருந்தால் கற்றுக் கொண்டிருக்கலாம் என்று கூறுகிறேன். நான் இதைச் செய்தே ஆக வேண்டும் என்று அறிவுறுத்தவில்லை. விளையாடி இருந்தால் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக உதவியாக இருந்திருக்கும் என்று சொல்கிறேன்”

இதையும் படிங்க : 92 வருடத்தில் முதல் முறை.. சென்னையில் இந்திய அணிக்கு வரலாற்று சாதனை வாய்ப்பு.. பங்களாதேஷ் டெஸ்ட்

“இந்தியாவில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடும் நினைவை புதுப்பிப்பதற்கு இது உதவியிருக்கும். ஆனாலும் அவர் சிறந்த வீரர் எனவே இலக்குகளை அவர் எட்டுவார் என்று நம்புகிறேன். மேலும் இந்திய அணியில் இப்பொழுதும் அவர்தான் நம்பர் ஒன் வீரர். டெஸ்ட் தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இந்திய அணி சாதிக்க அவரே முக்கிய காரணமாக இருப்பார் என்று நம்புகிறேன்” எனக் கூறி இருக்கிறார்.

- Advertisement -