நியூஸி அணியை ஜெயிக்க காரணம்.. இதுக்கு முன்னால எங்களுக்கு கிடைச்ச அந்த வெற்றிதான் – இலங்கை கேப்டன் பேட்டி

0
61
Dhananjaya de silva

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியவரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பான முறையில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய விதம் குறித்து இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 305 ரன்களும், அதற்குப் பிறகு நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 340 ரன்களும் குவிக்க பின்னர் தனது இரண்டாவது இன்னிசை விளையாடிய இலங்கை அணி 340 ரன்களும் அதற்குப் பிறகு நியூசிலாந்து அணி 211 ரன்கள் மட்டுமே குவிக்க இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும் கடைசி போட்டியில் பெற்ற வெற்றி இலங்கை அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்ததாக இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். கடைசி போட்டியில் பெற்ற வெற்றியே தற்போது நியூசிலாந்து அணியை வீழ்த்துவதற்கும் ஒரு காரணம் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இங்கிலாந்தில் நாங்கள் பெற்ற வெற்றி எங்கள் மன உறுதியை உயர்த்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான திறன் எங்கள் இடத்தில் உள்ளது. தற்போது அதுபோல வீரர்களும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பார்ட்னர்ஷிப்புகள் எப்போதுமே கல்லி மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வெற்றி பெறுவதற்கு உதவுகின்றன. (இரண்டாவது இன்னிங்ஸில் கருணாரத்னே மற்றும் சண்டிமாலுக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்) இருப்பினும் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

நாங்கள் எங்களது கீழ் வரிசை பேட்டிங் குறித்து விவாதித்தோம். புள்ளி விவரங்கள் எங்களிடம் மிக குறைந்த சராசரி இருப்பதாகவும் அதற்கு நாங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டும் எனவும் கூறுகிறது. மேலும் இந்த போட்டியில் நான் பந்து வீசுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் ரமேஷ் மெண்டிஸ் சிறந்த முறையில் இல்லாததால் நான் பந்து வீசினேன். இருப்பினும் என்னால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனை அணியின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கில் கூட பெரிய பார்ட்னர்ஷிப் வர வேற ஒரு காரணம் இருக்கு.. அது கிரவுண்டுக்கு வெளியே – ரிஷப் பண்ட் பேட்டி

இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தியது. இந்த நிலையில் இலங்கை அணியின் கேப்டன் சில்வா இந்திய அணியுடன் வெற்றி பெற்றது குறித்து கூறாமல் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றி குறித்து கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -