இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சுப்மன் கில் உடன் இணைந்து விளையாடுவது ஏன் எளிதானதாக இருக்கிறது என்பதற்கான பின்னணி காரணம் பற்றி கூறியிருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் சேர்ந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு இருவருமே சதம் அடித்து அசத்தினார்கள். இந்திய அணிக்கு நல்ல முன்னிலையை பெற்றுக் கொடுத்து, போட்டியை ஒருநாள் முன்பாகவே முடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கடி
முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து ரிஷப் பண்ட் அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல முறையில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு தவறான ஷாட் செலக்சன் காரணமாக 39 ரன்களில் வெளியேறினார். அதே சமயத்தில் சுப்மன் கில் துரதிஷ்டவசமாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இவர்கள் இருவருமே தங்களை நிரூபிப்பதற்கான நெருக்கடி இருந்தது. இப்படியான நிலையில்தான் மிகச் சிறப்பாக விளையாடி இருவருமே சதம் அடித்து தங்கள் திறமைக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். இந்த நிலையில் பில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டம் வெளிவருவதற்கான பின்னணி காரணம் குறித்து ரிஷப் பண்ட் கூறியிருக்கிறார்.
களத்திற்கு வெளியே நிகழ்கிறது
இதுகுறித்து ரிஷப் பண்ட் கூறும்போது “நான் கிரிக்கெட் விளையாட்டில் புரிந்து கொண்ட ஒரு விஷயம் நீங்கள் களத்திற்கு வெளியே ஒரு வீரருடன் நல்ல நட்பை கொண்டிருக்கும் பொழுது அது களத்தில் நீங்கள் பேட்டிங் செய்யும்பொழுது நல்ல விளைவை உண்டாக்குகிறது. இதன் காரணமாக மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது குறித்து நீங்கள் நன்றாக புரிந்து கொள்கிறீர்கள்.
இதையும் படிங்க : நான் இந்தவொரு இந்திய வீரருக்காக சல்யூட் பண்றேன்.. அவங்க 2 பேர் இல்லாம டீமே இல்ல – கம்ரன் அக்மல் பேச்சு
நாங்கள் களத்திற்கு வெளியில் மிகவும் ஜாலியாக பேசிக்கொள்ளக்கூடிய ஆட்கள். அதே சமயத்தில் களத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாகவும் சீரியஸாகவும் இருக்கக்கூடிய ஆட்கள். எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். எங்களுக்கு இப்படி ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைவதற்கு நல்ல புரிதல் இருந்தது. இதற்கு களத்திற்கு வெளியே எங்களிடையே இருக்கும் நட்பு முக்கிய காரணமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்