இலங்கை அணி தன் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி இருக்கிறது.
நியூசிலாந்து அணி இலங்கை நாட்டிற்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்து முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஒரே இன்னிங்ஸில் இமாலய இலக்கு
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு கமிந்து மெண்டிஸ் 182, தினேஷ் சண்டிமால் 116 குசால் மெண்டிஸ் 106 என மூவர் சதம் அடித்தார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. கிளன் பிலிப்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து பெரிய பிரம்மாண்ட ரன்னை முன்னே வைத்துக் கொண்டு விளையாடிய நியூசிலாந்து வெறும் 88 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இலங்கை அணியின் தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா ஆறு விக்கெட் கைப்பற்றினார். இலங்கையணி நியூசிலாந்து அணிக்கு பாலோ-ஆன் கொடுத்து மீண்டும் பேட்டிங் செய்ய வைத்தது.
நியூசிலாந்து இன்னிங்ஸ் தோல்வி
இதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ரன்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு கான்வே 61, கேன் வில்லியம்சன் 46, டாம் ப்ளூன்டல் 60, கிளன் பிலிப்ஸ் 78, இறுதியில் போராடிய மிட்சல் சான்ட்னர் 67 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி 360 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இறுதியாக இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தரப்பில் அறிமுகவீரர் ரியான் பாரிஸ் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியது.
இதையும் படிங்க : ஆர்சிபி இந்த ஒரு வீரரை மட்டுமே தக்க வைக்கும்.. இந்த முறை ஆச்சரியம் காத்திருக்கு – ஆர்பி சிங் பேட்டி
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பித்து 1886 நாட்கள் ஆன நிலையில் வெளிநாட்டு மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்டை வெல்லாமல் இருந்து வருகிறது. மேலும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றி சாதித்திருக்கிறது.