அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடக்க இருக்கும் மெகா ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே தக்க வைக்கும் என ஆர்பி சிங் கூறியிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடக்கிறது. இன்று காலை இந்த மெகா எலத்திற்கான புதிய விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் எந்த அணி நிர்வாகமும் முழுமையாக ஐந்து அல்லது ஆறு வீரர்களை தக்க வைக்க விரும்பாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபிக்கு பிரச்சனை இல்லை
இதுகுறித்து ஆர்பி.சிங் கூறும் பொழுது “இந்த முறை ஆர்சிபி அணிக்கு புதிய ஐபிஎல் ஏல விதிமுறைகளால் எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் நேராக விராட் கோலி மட்டுமே தக்க வைத்துக் கொள்வார்கள். பிறகு அனைவரையுமே விடுவித்து விடுவார்கள். ஏலத்தில் ஆர்டிஎம்மை பயன்படுத்தி பிறகு வாங்குவார்கள். ரஜத் பட்டிதாரை ஏலத்தில் 14 கோடிக்கு கீழே வாங்க முடியும்”
“அவர்களால் ரஜத் பட்டிதாரை ஏலத்தில் குறைவான விலைக்கு வாங்க முடியும். எனவே அவர் எப்படியும் ஏலத்தில் தக்க வைக்கும் விலையை விட குறைவாக கிடைப்பார். அவர் 11 கோடி ரூபாய்க்கு பக்கத்தில் சென்றாலும் கூட, உங்களிடம் ஆர்டிஎம் இருக்கும் நீங்கள் அதன் மூலம் அவரை வாங்குவதற்கு முயற்சி செய்யலாம்”
ஆர்சிபி அன்-கேப்டு பிளேயர்கள்
மேலும் அவர் கூறும் பொழுது “ஆர்சிபி அன்-கேப்டு பிளேயர்களை எடுத்துக் கொண்டால் அனுஜ் ராவத் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ராஜன் குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு நல்ல இடது கை வேகப்பந்துவீச்சாளர். இருந்த போதிலும் இவர்களுக்கு நான்கு கோடி ரூபாய் கொடுக்க மாட்டார்கள்”
இதையும் படிங்க : அன்கேப்டு பிளேயர் விதி.. தோனிக்கு மட்டுமே யூஸ் ஆகாது.. எல்லா டீமுக்குமே நல்லதுதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு
“எனவே அவர்கள் ஒரு புதிய மனநிலையுடன் செல்ல வேண்டும். விராட் கோலி அவர்களுக்கு மிக முக்கியமானவர் அவர் பிராண்டுக்காக நிறைய செய்திருக்கிறார். எனவே அவர்கள் அவரை தக்க வைப்பார்கள். அவரைச் சுற்றி அணியை எப்படி உருவாக்குவது என்பது பற்றி சிந்திப்பார்கள். அந்த அணியில் விராட் கோலியை தவிர 18 அல்லது 14 கோடி ரூபாய் பெறுவதற்கான வேறு எந்த வீரவையும் நான் பார்க்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.