இங்கிலாந்து உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இன்று முதல் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் சரிவை சந்தித்த இலங்கை அணி கடைசி கட்டத்தில் ஓரளவுக்கு மீண்டிருக்கிறது.
இலங்கைக்கு சோதனை தொடக்கம்
இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் நிசான் மதுஷ்கா 4, கருணரத்தினே 2, ஆஞ்சலோ மேத்யூஸ் 0, குஷால் மெண்டிஸ் 24, தினேஷ் சண்டிமால் 17, கமிந்து மெண்டிஸ் 12, பிரபாத் ஜெயசூர்யா 10 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற இலங்கை அணி நெருக்கடியில் சிக்கியது.
காப்பாற்றிய கேப்டன் மற்றும் அறிமுக வீரர்
இலங்கை அணி 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்த நிலையில் கேப்டன் தனஞ்செய டி சில்வாவுடன் அறிமுக வீரர் மிலன் ரத்னாயகே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி 98 பந்துகளுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் தனஞ்செய டி சில்வா அதிரடியாக 84 பந்தில் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து மிலன் ரத்னாயகே விஷ்வா பெர்னாடோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக விளையாடி 122 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக விளையாடிய மிலன் ரத்னாயகே 135 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து இலங்கை அணியை காப்பாற்றினார்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 150 ரன்கள் எடுப்பதற்குள் ஆல் அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து இலங்கை அணி ஓரளவுக்கு தப்பித்தது. இலங்கை அணி இறுதியாக 74 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3, சோயா பஷீர் 3, கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : சிஎஸ்கே இல்லை.. என்னை பொருத்தவரைக்கும் மும்பைதான் அதுல நம்பர் ஒன்.. பியூஸ் சாவ்லா பேட்டி
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பில்லாமல் 22 ரன்கள் 4 ஓவர்களுக்கு எடுத்து இருந்த பொழுது வெளிச்சம் இல்லாத காரணத்தினால் போட்டி முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. நாளை இங்கிலாந்து அணி முழுமையாக 90 ஓவர்கள் விளையாடினால் போட்டி 90% இங்கிலாந்து அணியின் கைகளில் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.