பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை இப்படி பண்ணாதிங்க.. வரலாறு காணாத சலிப்பு – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

0
344
Pakistan

பாகிஸ்தான அணி சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தை அமைத்த விதத்தில் பெரிய விமர்சனங்களை சந்தித்துக் கொண்டு வருகிறது. இந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் மோசமான முறையில் பந்துவீச்சாளர்களுக்கு எந்தவித சாதகமும் இல்லாத தார் சாலை போலான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது போல தெரிந்தது. ஆனால் மீண்டும் அதே நிலைமையே தொடர்கிறது.

- Advertisement -

28 வருடங்களுக்குப் பிறகு நடத்த மாற்றம்

தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் கூட கிடையாது. பாகிஸ்தான் உள்நாட்டில் ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் கூட இல்லாமல் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாக 28 வருடங்களுக்குப் பிறகு இது அமைந்திருக்கிறது.

மேலும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் சேஷன் கில்லெஸ்பி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்கக் கூறி, அதன்படியே பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் வேத பந்துவீச்சாளர்களை அடிப்படையாகக் கொண்ட அணி களம் இறங்கியது என்று பேசப்பட்டது.

- Advertisement -

மாறாத பழைய கதை

இப்படியான நிலையில் மீண்டும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் ஆடுகளம் தார் சாலை போல பேட்ஸ்மேன்களுக்கு சாதகம் கொண்டதாகவே இருக்கிறது. ஆறு விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் முதல் வின்னிங்சில் 448 ரன்கள் குவிக்க, பங்களாதேஷ அணி 565 ரன்கள் முதல் இன்னிங்ஸில் குவித்திருக்கிறது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க பாகிஸ்தானில் ரசிகர்கள் மைதானத்திற்கு வருவதில்லை. குறிப்பாக இலவச டிக்கெட் கொடுத்தும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அஸ்வின் இடத்துக்கு 3 பேர் இருக்காங்க.. ஆனா இந்தப் பையனுக்குதான் அதிக வாய்ப்பு இருக்கு – தினேஷ் கார்த்திக் கணிப்பு

தற்பொழுது இதுகுறித்து விமர்சனம் செய்திருக்கும் இந்திய முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கூறும் பொழுது “பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரலாற்றில் காணாத அளவுக்கான சலிப்பான விஷயமாக இருக்க வேண்டும். அவர்கள் ஏன் இப்படி மோசமான ஆடுகளங்களை உருவாக்குகிறார்கள் என்று புரியவில்லை” என்று கூறியிருக்கிறார். இதையே கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் விமர்சனமாகக் கூறி வருகிறார்கள்.

- Advertisement -