அந்த டீம்ல எங்களுக்கு சிக்கலே இவர்னாலதான்.. 20-30 பந்து ஒரே மாதிரி வீசுறாரு – இலங்கை கேப்டன் வேதனை

0
286

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி வீரர்கள் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகளில் விளையாடுவது குறித்தும், இங்கிலாந்து பந்து வீச்சாளர் குறித்தும் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளில் விளையாடும் ஆர்வத்தை தாண்டி வெளிநாடுகளில் உள்ள கிளப் கிரிக்கெட்டில் விளையாடுவதை கனவாக வைத்திருப்பார்கள். அதில் இங்கிலாந்தில் உள்ள கவுண்ட்டி கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதை வெளிநாட்டு வீரர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.ஏனென்றால் இங்கு விளையாடி தங்களது திறமையை நிரூபித்தால் அவர்களின் சொந்த நாட்டு அணிகளில் ஒரு நிலையான இடத்தை பிடிக்கலாம்.

இந்த நிலையில் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், இலங்கை கேப்டன் தனஞ்செயா டி செல்வா இலங்கை வீரர்களுக்கு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் போது மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைக்கிறது என்றும், கிளப் கிரிக்கெட்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தனது கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சில்வா விரிவாக கூறும்போது “இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலைகளில் விளையாடுவது எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக இருக்கும். நாங்கள் இன்று சுற்றுப்பயணம் செய்யும் போது மட்டுமே இங்கு விளையாட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பேட்ஸ்மேன்கள் கவுண்டி கிரிக்கெட் தொடர்களில் விளையாடினால் மிக நன்றாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே நான் ஏதேனும் ஒரு மாவட்ட ஒப்பந்தத்தை இங்கிலாந்தில் பெற விரும்பினேன்.

ஆனால் தற்போது வரை எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தொடரில் நான் சிறப்பாக செயல்பட்டால் இங்குள்ள ஏதேனும் மாவட்ட ஒப்பந்தத்தில் தேர்ந்தெடுக்கப்படுவேன். கவுண்டி கிரிக்கெட் சீசன் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. மேலும் இங்குள்ள ஆடுகளத்தின் சூழ்நிலை எங்களுக்கு புதியது. இங்கு பந்தின் வேகம் ஒருபோதும் என்னை தொந்தரவு செய்யவில்லை.

இதையும் படிங்க:பாகிஸ்தான் தயவுசெய்து பிசிசிஐ செய்ற அதை காப்பியடிங்க.. ஆஸி இங்கிலாந்து மாடல் வேண்டாம் – பாக் பசித் அலி வேண்டுகோள்

ஆனால் பந்தில் லைன் அண்ட் லென்த் இதுதான் பெரிய சவாலாக இருக்கிறது. இங்கிலாந்து அணியின் தொடக்கப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் ஒரே ஏரியாவில் தொடர்ந்து 20 முதல் 30 பந்துகளை வீசுகிறார். அதுதான் எங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை. பந்தின் ஸ்விங்கில்தான் எங்களுக்கு பிரச்சனை வேகத்தில் அல்ல. எங்கள் திட்டங்கள் சரியாக செயல்பட்டால் நாங்கள் மேலே வருவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -