பாகிஸ்தான் அணி கடந்த வருடத்தில் இருந்து மிகப்பெரிய சரிவுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரர் பசித் அலி ஆஸ்திரேலியா இங்கிலாந்தை காப்பியடித்தது போதும் இந்தியாவை காப்பியடிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற முடியாமல் போனதிலிருந்து, அந்த அணிபெரிய தோல்விகளை சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் அறிமுக அணி அமெரிக்காவிடம் தோற்று இரண்டாவது சுற்று முன்னேற முடியாமல் வெளியேறியது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயல்
2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வி அடைந்தது அடுத்து இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது என பாகிஸ்தான் அணி சந்திக்கும் தோல்விகளால் அந்த நாட்டின் கிரிக்கெட்டில் பெரிய புயல் அடித்துக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து வெளிவருவதற்காக வெள்ளைப்பந்து மற்றும் சிவப்புப்பந்து பாகிஸ்தான் அணிகளுக்கு புதிய இரண்டு பயிற்சியாளர்களை நியமித்தது, வீரர்களுக்கு ஒழுக்க கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது, சிறப்பு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணுகுமுறைகளை கொண்டு வந்தது. இப்படியான நிலையில் சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணியிடம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்தியாவை காப்பியடியுங்கள்
இது குறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாம் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்து இருப்பது எனக்கு மிகப்பெரிய நல்ல செய்தி. இது பாபர் அசாமுக்கும் நல்லது. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையிலும் அவர் கீழே போக வேண்டும்.இப்போது பாபர் இதனால் நல்ல பசியுடன் இருப்பார் என்றால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இது நடந்தது அவருக்கு ஆசிர்வாதமாக அமையும்.
பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை முடித்து அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து சிஸ்டத்தை காப்பியடித்து விட்டது. காப்பி அடிப்பதில் கூட ஒரு புத்திசாலித்தனம் வேண்டும்.
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட்.. இலங்கை அதிரடி பிளேயிங் XI.. 2 மாற்றம்.. சண்டிமல் சொன்னது நடக்குமா?
எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை காப்பியடிக்க வேண்டும். ஏனென்றால் அடுத்து இந்தியாவில் உள்நாட்டு தொடரான துலீப் டிராபி தொடங்குகிறது. இது ஒருநாள் மற்றும் டி20 வடிவத்தில் நடைபெறக்கூடிய தொடர் கிடையாது. இது டெஸ்ட் வடிவத்தில் நடைபெறக்கூடிய தொடர். அவர்கள் தங்கள் தளத்தை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். அதனால்தான் அவர்கள் மிகவும் வெற்றிகரமானவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.