அம்பயர் கிட்ட போன் நம்பர் இருக்கும்.. பிளேயர் சாதகமா தீர்ப்பு வாங்கறாங்க – பாகிஸ்தான் பாகிம் அஷ்ரப் குற்றச்சாட்டு

0
229
Asraf

பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டில் வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் நட்பு இருப்பதாகவும் இதனால் சாதகமான தீர்ப்புகள் வழங்கப்படுவதாகவும் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் பாகிம் அஷ்ரப் நேரடியாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய குழப்பங்கள் நிலவிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் அமைப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் இருக்கிறது. ஒரு வழியாக புதிய பயிற்சியாளர்களை தேடி கண்டுபிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது புதிய கேப்டனை கண்டுபிடிக்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பெரிய அளவில் பாதிக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட்

பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதன் காரணமாக புதிய திறமையான வீரர்கள் பாகிஸ்தான் தேசிய அணிக்கு கிடைப்பது கடினமாகி வருகிறது. மேலும் சில பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு செலவு செய்தால் மட்டுமே பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை சிறப்பாக மாற்ற முடியும் என்று கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டில் வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் இடையே நட்பு இருக்கிறது என்றும், அவர்கள் தங்களுக்குள் மொபைல் எண்களை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு இருக்கிறார்கள் என்றும், இதனால் களத்தில் சாதகமான தீர்ப்புகள் வழங்கப்படுகிறது என்றும் பாகிம் அஷ்ரப் அதிரடி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

- Advertisement -

தரமே இல்லாத நடுவர்கள்

இது குறித்து அவர் கூறும் பொழுது “நம்முடைய நல்ல நடுவர்கள் முன்பே சென்று விட்டார்கள். உள்நாட்டு கிரிக்கெட்டில் நடுவர்கள் மோசமாக இருக்கிறார்கள். உள்நாட்டுப் போட்டிகளுக்கு டிவி கவரேஜ் இல்லாத காரணத்தினால் இதுவெல்லாம் வெளியில் தெரிவது கிடையாது. இப்போது சாம்பியன்ஸ் ஒன் டே கப் டிவியில் வருவதால் நடுவர்களின் தரம் தெரிகிறது. இனி யாரை நடுவர்களாக நியமிக்க வேண்டும் என இதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்”

இதையும் படிங்க : எங்க பாகிஸ்தான் பவுலர்ஸ்.. மோர்கலை ஒன்னுமே இல்லனு நினைச்சாங்க.. இந்தியா செம – பசித் அலி விமர்சனம்

“உள்நாட்டு கிரிக்கெட்டில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் மொபைல் எண்களை பரிமாறும் அளவுக்கு இருக்கிறது. இதன் காரணமாக தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை வாங்குகிறார்கள். இதை நான் நேரடியாகவே சொல்கிறேன். ஆனால் தற்போது சாம்பியன்ஸ் ஒன் டே கப் தொடரில் அப்படி எதுவும் இல்லை. ஏனென்றால் இது நேரடி ஒளிபரப்பாகிறது. எல்லோருமே பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -