தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வயது கிரிக்கெட் வீரரான க்வேனா மபாகா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று இருந்தார்.
பள்ளி மாணவர் ஆன இவர், படிப்பிலும் கவனம் செலுத்தி அதே வேளையில் கிரிக்கெட்டிலும் தனது ஈடுபாடு குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தென்னாபிரிக்காவின் அண்டர் 19 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி அதிக விக்கெட் வீழ்த்திய க்வேனா மபாகாவின் திறமை அறிந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், இவரை முழு வீச்சில் தயாராகும் வகையில் இப்போது இருந்து கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கொடுத்து வருகிறது. 18 வயது வீரரான இவர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார்.
இவரது அறிமுகம் மும்பை அணிக்கு சரியாக அமையவில்லை என்றாலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த மபாகா தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்ததாகவும், கிரிக்கெட் விளையாடிக் கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தி வந்ததாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் கிரிக்கெட் தொடரை முடித்துவிட்டு திரும்பவும் வீட்டுக்கு செல்லும்போது தேர்வுகள் இருக்கிறது. துரதிஷ்டவசமாக நான் சுற்றுப்பயணத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் படிப்பும், கொஞ்சம் வேலையும் இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு பிறகு தேர்வுகளோடு பள்ளியும் முடிவடைகிறது. தென்னாப்பிரிக்கா அணியை பிரதிநிதிப்படுத்துவது மிகப்பெரிய பாக்கியம் மற்றும் எனக்கு கிடைத்த கௌரவம்.
ரொம்ப நாளாகவே என் மனதுக்குள் இது பிடித்திருக்கிறது. தென்னாபிரிக்க அணிக்காக விளையாட எனது வாழ்நாள் முழுவதும் நான் கனவு காண்கிறேன். அதாவது ஒரு கேக்கின் மீது இருக்கும் செர்ரி பழம் போன்று ஒரு இளைய வீரராக நான் அதைச் செய்ய வேண்டும். எனது சிறிய வயதில் இருந்து அனைவரும் எனக்கு நல்ல திறமை இருக்கிறது என்று கூறினார்கள். கிரிக்கெட் என்பது நான் உண்மையாக தொடர விரும்பிய ஒரு விளையாட்டு.
இதையும் படிங்க:ஐசிசி புதிய தலைவர் ஜெய் ஷா.. நேர்மையை நிரூபிக்க இத செஞ்சே ஆகணும் – யூனிஸ் கான் பேட்டி
என்னுடைய ஏழு வயதில் இருந்தே நான் தென்னாப்பிரிக்க வீரராக இருக்க வேண்டும் என்று கனவு கண்டு வருகிறேன்” என்று கூறுகிறார். மிக இளம் வயது கிரிக்கெட் வீரராக இருக்கும் இவர் அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு பெற்று மிகப்பெரிய நட்சத்திர வீரராக இருப்பார் என்று நம்பிக்கை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை வைத்திருக்கிறது.