ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே சார்ஜாவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளுக்கும் இடையே சார்ஜாவில் வைத்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்பட்டது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆப்கானிஸ்தான அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. எனவே மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான் மற்றும் பஸருல்லாஹ் பரூக்கி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது.
மீண்டும் ரஹமனுல்லாஹ் குர்பாஸ்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடி சதம் அடித்த ரஹமனுல்லாஹ் குர்பாஸ் இந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி 94 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 89 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக பந்துவீச்சாளர் அல்லா கஸன்பர் அதிரடியாக 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான அணியில் எட்டு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள். அந்த அணி 34 ஓவர்களில் 163 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி நிகிடி, பீட்டர் மற்றும் பெலுவாகியோ மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
ஒயிட் வாஷில் தப்பித்த தென் ஆப்பிரிக்கா
இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டோனி டி சோர்சி 26, கேப்டன் டெம்பா பவுமா 22, ரீசா ஹென்றிக்ஸ் 18 ரன்களில் வெளியேறினார்கள். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது போட்டியிலும் அதிர்ச்சி தோல்வியடையுமா? என்கின்ற சந்தேகம் நிலவியது.
இதையும் படிங்க : தன்னை தானே ரன் அவுட் செய்த ஆப்கான் வீரர்.. கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு.. தென் ஆப்பிரிக்கா தொடர்
இப்படியான நிலையில் எய்டன் மார்க்ரம் அரைசதம் அடித்து ஆட்டம் இழக்காமல் 67 பந்துகளில் 69 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 42 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 33 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.