இந்தியாவ நாங்க சொந்தமா நினைக்கிறோம்.. காரணம் இவ்வளவு இருக்கு – ஆப்கான் கேப்டன் நெகிழ்ச்சி

0
857
Shahidi

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸமத்துல்லா ஷாகிதி இந்தியா என்று நினைக்கும் பொழுது சொந்தம் என்கின்ற உணர்வுதான் வருகிறது என்று நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான அணி விளையாட இருக்கிறது. இத்தொடர்ந்து சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் இந்தியாவில் வைத்து ஒரு தொடர் விளையாட இருக்கிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்கு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் ஆரம்பத்தில் பாகிஸ்தானை மையமாக கொண்டு பயிற்சிகள் பெறுவது சில உதவிகளை பெறுவது என்று சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த இரு நாடுகளுக்கு இடையே ஆன உறவில் விரிசல் விழ இந்த உதவிகள் நாளடைவில் நின்றது.

இதற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரிய அளவிலான உதவிகளை இந்தியா செய்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதற்கு இந்தியா அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து டேராடூன் மற்றும் லக்னோ மைதானங்களிலும் விளையாடிக் கொள்ள இந்தியா அனுமதி கொடுத்தது.

- Advertisement -

இந்திய இந்தியா ஆப்கானிஸ்தானில் சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்களை கட்டுவதற்கு உதவிகளை செய்து கொண்டு வருகிறது. மேலும் 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அங்கீகாரம் பெற்றதும் அந்த அணியின் முதல் போட்டியை இந்திய அணிக்கு எதிராக நடத்தவும் செய்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா ஸ்பான்ஸர் செய்தது. இப்படி இந்தியா ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பங்களிப்புகளை செய்து வருகிறது.

இந்தியா சொந்தம் என்கிற உணர்வு

அதே சமயத்தில் கிரிக்கெட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் தேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடுமையாக உழைப்பதும், அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு தேவையானதை தங்களால் முடிந்த வரையில் செய்து வருகிறது. இந்த வகையில் இங்கிலாந்து முன்னால் வீரர் ஜோனதன் டிராட்டை பயிற்சியாளராக வைத்திருக்கிறது. தேவைப்படும் பொழுது அதை ஜடேஜா மற்றும் டிவேன் பிராவோ போன்றவர்களையும் பயிற்சியாளர் குழுவுக்கு கொண்டு வந்திருந்தது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஒரு சர்க்கஸ்.. அவங்க கோமாளிகள்.. காரணத்தை பாருங்க – பாக் முன்னாள் வீரர் பேட்டி

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸமத்துல்லா ஷாகிதி கூறும்பொழுது “இந்தியாவில் அனைவருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பற்றி தெரியாது. ஆனால் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பெயரை குறிப்பிட்டாலே போதும், அனைவருக்குமே இந்தியா சொந்தம் என்கின்றது போல உணர்வுதான் எழும்” என்று நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

- Advertisement -