சூரியகுமாரை பாராட்டி 6 மாசத்துக்கு முன்னாடி விராட் கோலி டீவீட்… நேரம் பார்த்து விராட் கோலியை பழிவாங்கிய கங்குலி!

0
4103

ஆறு மாதத்திற்கு முன்னர் விராட் கோலி பதிவிட்ட ட்வீட் போலவே ஒரு ட்வீட்டை இப்போது பதிவிட்டு, சூரியகுமார் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடியதை பாராட்டி விராட் கோலியை குத்தி காட்டும் விதமாக செய்துள்ளார் கங்குலி.

ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மிகமுக்கியமான லீக் போட்டியில் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் டூ ப்லசிஸ்(65) மற்றும் மேக்ஸ்வெல்(68) இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றனர்.

- Advertisement -

இவர்கள் இருவரும் அவுட் ஆன பிறகு, அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் சோபிக்காததால் 200 ரன்கள் கூட ஆர்சிபி அணியால் எட்ட முடியவில்லை. 20 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர்.

இந்த இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிசான் அதிரடியாக 42(21) ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அடுத்து உள்ளே வந்த சூரியகுமார் வானவேடிக்கை காட்டினார். இவர் 35 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உட்பட 83 ரன்கள் விளாசினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார்.

சூரியகுமாருக்கு பக்கபலமாக இருந்த நேஹால் வதேரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 16.3 ஓவர்களில் இலக்கை கடந்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலிலும் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறியது.

- Advertisement -

இப்போட்டியில் சூரியகுமார் விளையாடி விதம் பலரையும் பாராட்ட வைத்துள்ளது. டி20 போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திவிட்டார் என்றும் பலரும் பாராட்டினார். அந்த வரிசையில் முன்னாள் பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சௌரவ் கங்குலி பாராட்டியது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

6 மாதத்திற்கு முன்னர் விராட் கோலி போட்ட ட்வீட் போலவே, இப்போது ட்விட்டரில் பதிவிட்டு ஆர்சிபி அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் விளையாடிய ஆட்டத்தை பாராட்டியுள்ளார். இது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. கங்குலி பதிவிட்டதாவது:

“சூரியகுமார் யாதவ் பெஸ்ட் டி20 வீரர். கம்ப்யூட்டரில் கிரிக்கெட் கேம் விளையாடுவது போல ஆடினார்.” என்று பதிவிட்டு இருந்தார்.

விராட் கோலி 6 மாதத்திற்கு முன்பு சூரியகுமார் யாதவ் விளையாடிய ஆட்டத்திற்கு பாராட்டி ட்வீட் செய்ததாவது:

“சூரியகுமார் யாதவ் மீண்டும் ஒருமுறை தான் பெஸ்ட் டி20 பிளேயர் என்பதை காட்டிவிட்டார். போட்டியை நேரில் காணாத முடியவில்லை. ஆனால் கட்டாயம் கம்ப்யூட்டரில் கிரிக்கெட் ஆடுவது போல ஆடி இருப்பார்.” என்று பதிவிட்டார்.

சூரியகுமாரை பாராட்டி விராட் கோலி பதிவிட்டது போல, இப்போது கங்குலி பதிவிட்டு இருப்பதால், இது பழிவாங்கும் செயல் என்று பேசி வருகின்றனர். இந்த சீசனில் இதற்கு முன்னோர் நடந்த போட்டிகளிலும் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அப்போதெல்லாம் பாராட்டாமல் விராட் கோலிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மட்டும் இவரை பாராட்டுவது பழி தீர்க்கும் செயலாக தெரிகிறது என்ற இணையத்தில் கங்குலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.