இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பிசிசிஐ நிச்சயமாக அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் ஐபிஎல் தொடரை ஆரம்பித்து நடத்தி முடிக்கும் என்றும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்திருக்கின்ற காரணத்தினால் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து தொடர் மீண்டும் நடைபெறுமா? என்பது குறித்து சந்தேகம் எழுந்திருக்கிறது.
ஐபிஎல் தொடர் நடைபெறுமா?
தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கும் ஐபிஎல் தொடர் ஒரு வாரம் கழித்து மீண்டும் நடைபெறுமா என்பது, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டம் எந்த அளவில் இருக்கிறது என்பதை பொறுத்து தான் முடிவு செய்யப்படும். மேலும் அதிகாரப்பூர்வமாக பதட்டம் அதிகரித்து விட்டால் நிச்சயம் ஐபிஎல் தொடரை நடத்த இந்தியா விரும்பாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓரளவுக்கு நிலைமைகள் கட்டுக்குள் இருந்தால் தென்னிந்தியாவில் நடத்தி முடிக்கலாம். இல்லையென்றால் இப்பொழுதே இங்கிலாந்தில் வைத்து நடத்தி முடிப்பதற்கான அருமையான வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் பி சி சி ஐ ஒரு வாரம் பொறுத்து முடிவு செய்யலாம் என்று யோசிக்கிறது.
பிசிசிஐ செய்து முடிக்கும்
இது குறித்து சௌரவ் கங்குலி கூறும் பொழுது ” பிசிசிஐ நிச்சயமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்கும். ஒரு வாரம் கழித்து நிச்சயம் தொடர் ஆரம்பிக்கும். தேவைப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை அடுத்த ஒரு வாரத்தில் நடத்தி விடும்”
இதையும் படிங்க : அவசரப்பட்டுடீங்ளே ரோகித்.. இதை யோசிச்சு இருந்தா நீங்க ஓய்வு முடிவை எடுத்திருக்க மாட்டீங்க – இந்திய முன்னாள் வீரர்
“கோவிட் போன்ற சமயத்தில் ஐபிஎல் தொடர் முழுவதுமாக நிறுத்தப்பட்டு பிறகு நடத்தப்பட்டது போல நடக்காது. எப்பொழுதும் கூட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசின் உத்தரவுகளை கேட்டு அதன்படி சிறப்பான முறையில் ஐபிஎல் தொடரை நடத்திக் கொடுத்தது. எனவே கடினமான காலகட்டங்களில் தொடரை நடக்கும் அனுபவம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.