இந்திய அணி நாளை மறுநாள் கான்பூர் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆறு முக்கிய சாதனைகளை செய்வதற்கான பெரிய வாய்ப்புகள் இருக்கிறது.
காத்திருக்கும் ஆறு மெகா சாதனைகள்
டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸ்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 99 விக்கெட் எடுத்திருக்கிறார். இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை படைப்பார். மேலும் ஆறாவது சர்வதேச வீரர் ஆவார்.
மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் மூன்று விக்கெட்டுகள் பங்களாதேஷனுக்கு எதிராக எடுத்தால் ஜாகீர் கான் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 31 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் சாதனையையும் முறியடிப்பார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக மாறுவார்.
தற்போது நடைபெற்று 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் அதிக விக்கெட் கைப்பற்றியவராக இருந்து வருகிறார். அஸ்வின் இன்னும் நான்கு விக்கெட் கைப்பற்றினால் இந்த சாதனையும் அவர் கைவசம் வரும்.
உடைய காத்திருக்கும் வார்னேவின் மெகா ரெக்கார்டு
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஐந்து விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 37 முறை ஐந்து விக்கெட் கைப்பற்றி அஸ்வினும் வார்னேவும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அடுத்த டெஸ்டில் அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் கைப்பற்றினால் வார்னேவின் ரெக்கார்டை தாண்டி முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் நிற்பார்.
மேலும் இதுவரை ஒட்டுமொத்தமாக மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 187 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றியவராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இருக்கிறார். அஸ்வின் இன்னும் எட்டு விக்கெட் கைப்பற்றினால் இந்த மெகா சாதனையும் உடைக்கப்படும்.
இதையும் படிங்க : கில் இளவரசன்தான்.. அஸ்வின் பேச்சுக்கு ஆகாஷ் சோப்ரா மறைமுக பதிலடி.. சும்மா அந்த பட்டம் தரல
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 530 விக்கெட்டுகள் எடுத்து ஏழாவதுஇடத்தில் இருக்கிறார். இன்னும் அஸ்வின் ஒன்பது விக்கெட் கைப்பற்றுவதின் மூலம் நாதன் லயனை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்திற்கு முன்னேறுவார்.