கில் இளவரசன்தான்.. அஸ்வின் பேச்சுக்கு ஆகாஷ் சோப்ரா மறைமுக பதிலடி.. சும்மா அந்த பட்டம் தரல

0
86
Gill

இந்திய கிரிக்கெட்டின் இளவரசர் என்ற பட்டம் சுப்மன் கில்லுக்கு தவறாக கொடுக்கப்படவில்லை எனவும் அது மிகவும் சரியாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் ஆகாஷ் சோப்ரா சில புள்ளிவிபரங்களை வெளியிட்டு பேசி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூடியூப் வீடியோவில் பேசி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மீடியாக்கள் தங்களுடைய வியாபாரத்திற்காக கில்லுக்கு இந்த மாதிரியான பட்டங்கள் கொடுக்கலாம், நான் அப்படி எந்த பட்டத்தையும் யாருக்கும் தரமாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். இப்படியான நிலையில்தான் ஆகாஷ் சோப்ரா இந்த கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சுப்மன் கில் அதிக சதங்கள்

சுப்மன் கில் 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். அவர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையில் இந்திய அணிக்கு சதம் அடித்தவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அவர்தான் அதிக சதங்கள் அடித்திருக்கிறார். கில் மொத்தம் 12 சதங்கள் இந்திய அணிக்கு அடித்திருக்கிறார்.

அதே சமயத்தில் விராட் கோலி 10 மற்றும் ரோகித் சர்மா 10 சதங்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் கில் அறிமுகமானதிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர் ஆக இருந்து வருகிறார். இப்படியான காரணங்களை குறிப்பிட்டுள்ள ஆகாஷ் சோப்ரா கில்லுக்கு இளவரசன் என்ற பட்டம் மிகவும் சரியானது தான் என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மகத்துவத்தை நோக்கி ஓடும் பையன்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்கு அதிக சதங்கள் அடித்தவர்களை எடுத்துப் பார்த்தால் அதில் சுவாரசியமான விஷயம் இருக்கிறது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் கில் பெயர் இருக்கிறது. அவர் 114 இன்னிங்ஸ்களில் மொத்தம் 12 சதங்கள் அடித்திருக்கிறார்”

“இதில் ரோகித் சர்மா 148 இன்னிங்ஸ்களில் 10 சதங்களும், விராட் கோலி 149 இன்னிங்ஸ்களில் 10 சதங்களும் எடுத்திருக்கிறார்கள். இவர்கள் எங்களுக்கு எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களாக இருப்பவர்கள். இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் என கில்லுக்கு தவறாக பட்டத்தை வழங்கவில்லை”

இதையும் படிங்க : ரஞ்சி டிராபி டெல்லி அணியில் விராட் கோலி பெயர்.. மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுகிறாரா? – வெளியான தகவல்கள்

“கில் டிஎன்ஏவில் அது இருக்கிறது. அவர் மகத்துவத்தை நோக்கி வேகமாக ஓடுகிறார். ஏனென்றால் அவரால் சிறப்பாக வர முடியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அவர் மனது வைத்தால் நிச்சயம் மகத்துவம் உருவாகும். அது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லதான ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -