இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தன்னை சில பெண்களுடன் இணைத்து பேசப்படுவது குறித்தும், 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்வி குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கில்லின் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. ஒருங்கிணைந்த அணியாக குஜராத் டைட்டன்ஸ் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில் துவக்க ஆட்டக்காரராகவும் கேப்டனாகவும் கில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்.
என் வாழ்க்கையில் அற்புதமான தருணம்
இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கில் அவரைப் பற்றி வெளிவரும் சில கிசு கிசுக்கள் பற்றியும், 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்வி மற்றும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி வெற்றி ஆகியவற்று குறித்தான கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையான முறையில் பதில் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து கில் பேசும் பொழுது “2023ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் நாங்கள் சிறந்த கிரிக்கெட் விளையாடினோம் மேலும் அந்த தொடரில் நாங்கள்தான் சிறந்த அணி. சில நேரங்களில் நீங்கள் சிறப்பான முறையில் விளையாடினாலும் கூட தொடரை வெல்ல முடியாமல் போகலாம். ஒரு போட்டியை வைத்து உங்களை சிறந்த அணி இல்லை என்று தீர்மானிக்க முடியாது. நாங்கள் எதையும் யாருக்கும் நிரூபிக்க விரும்பவில்லை. நாங்கள் உலகின் மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி என்று எங்களுக்கு நன்றாக தெரியும்”
என் குறித்த கிசுகிசுக்கள் உண்மையா?
“நான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பையா இருவரையும் பார்த்து வளர்ந்தவன். இவர்கள் இருவரும் என்னுடைய ஐடியல். மேலும் இவர்கள் இருவருடனும் இணைந்து சாம்பியன் டிராபி தொடரை வென்றது என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் அற்புதமான ஒரு தருணம். இதையெல்லாம் மறக்க முடியாது”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சீக்கிரம் வீட்டுக்கு போகனும் என்று சிஎஸ்கே வீரர்கள் விளையாடுகிறார்கள்.. சேவாக் கடும் தாக்கு
“நான் கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கிளாக இருந்து வருகிறேன். ஆனால் என்னை பலரோடு தொடர்பு படுத்தி யூகங்கள் மற்றும் வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் அது மிகவும் அபத்தமானது. ஏனென்றால் என்னுடன் தொடர்புபடுத்தும் நபர்களை நான் நேரில் சந்தித்ததும் பேசியதும் கிடையாது. இப்போது நான் என்னுடைய தொழில் வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.