பாகிஸ்தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தன்னுடைய பணிச்சுமை பற்றி கூறியது குறித்து ஷாகின் அப்ரிடி மறைமுகமான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
புதிய பயிற்சியாளரான கேரி கிரிஸ்டன் உடன் ஷாகின் அப்ரிடி சரியாக இணைந்து பணி செய்யவில்லை என்றும், அவரை அவமரியாதையாக பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. பிறகு இதற்காக அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரி கிரிஸ்டன் பேச்சு
கேரி கிரிஸ்டன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கடந்த 18 மாதங்களில் உலகில் மற்ற வேகப்பந்துவீச்சாளர்களை விட ஷாகின் அப்ரிடி மூன்று மடங்கு அதிகமாக பந்து வீசி இருப்பதாகவும், அவரது பணிச் சுமை நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும் அவருக்கு ஆதரவாகவே பேசி இருந்தார்.
இப்படியான நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்ட ஷாகின் அப்ரிடி தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மீண்டும் அணிக்குள் வந்திருக்கும் அவர் பயிற்சியாளரின் கருத்துக்கு எதிரான முறையில் பேசி பரபரப்பை கூட்டி இருக்கிறார்.
ஷாகின் அப்ரிடி எதிர்ப்பு பேச்சு
ஷாகின் அப்ரிடி பேசும்பொழுது “உங்களுக்கு எதையும் செயல்படுத்தும் மனஉறுதியும் வலிமையும் வேண்டும். சோம்பேறியாக இருந்து உங்களால் செயல்பட முடியாது. உங்கள் உடல் ஒத்துழைக்காத பொழுது அணி நிர்வாகத்தின் ஆதரவு தேவை. இங்கு அதிகம் பந்து வீசுவது ஒரு பிரச்சனை கிடையாது. நாங்கள் கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறோம் எனவே நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்து தான் ஆக வேண்டும்”
இதையும் படிங்க: கம்பீர் அகர்கருக்கு நான் யாருனு காட்ட விரும்பறேன்.. அடுத்த வருஷம் அவங்க இங்கிலாந்து வரட்டும் – யுஸ்வேந்திர சாகல் பேட்டி
“கடந்த காலத்தில் நமது புகழ்பெற்ற வேகபந்துவீச்சாளர்களான வாசிம் அக்கரம் பாய் மற்றும் வக்கார் யூனுஸ் பாய் ஆகியோரை எடுத்துக்கொண்டால்,அப்போது அவர்களுக்கு பணிச்சுமை குறித்த பிரச்சினைகள் எதுவுமே இல்லை. எனவே எனக்கு பணிச்சுமை பிரச்சனையாக இருந்தது கிடையாது. நான் தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.