இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நாளை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி குவாலியர் நகரில் புதிய மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிகள் தங்களால் வெற்றி பெற முடியும் என பங்களாதேஷ் வீரர் தவ்ஹித் ஹ்ரிடோய் கூறியிருக்கிறார்.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இடம் பெறாத தவ்ஹித் ஹ்ரிடோய் டி20 தொடரில் பங்களாதேஷ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். இவர் முதல் போட்டி நடக்க இருக்கும் குவாலியர் புதிய மைதானம் குறித்தும், போட்டியில் வெற்றி பெறுவது குறித்தும் பேசியிருக்கிறார்.
வரலாறாக மாறிய கான்பூர் டெஸ்ட் போட்டி
பங்களாதேஷில் இந்தியா வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் சென்று பாகிஸ்தான் அணியை அவர்களது சொந்த நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக வென்று ஆச்சரியப்படுத்தியது. இதே நம்பிக்கையோடு பங்களாதேஷ் அணி இந்திய மண்ணில் இந்திய அணியை தோற்கடிக்க வந்தது.
பெரிய டெஸ்ட் கிரிக்கெட் அணிகளே இந்தியாவில் தடுமாறும் பொழுது, சிறிய அணியால் பங்களாதேஷ் அணியால் இந்திய அணியை இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் கான்பூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2 நாட்களுக்குள் தோற்று போட்டியை வரலாறாக மாற்றி விட்டது.
தவ்ஹித் ஹ்ரிடோய் நம்பிக்கை
இந்த நிலையில் இந்தத் தொடர் குறித்து பேசி இருக்கும் தவ்ஹித் ஹ்ரிடோய் கூறும்பொழுது “டி20 என்பது ரன்கள் குவிக்கும் ஒரு ஆட்டமாகும் ஒவ்வொரு அணியும் ரன்கள் குவிக்க விரும்புகிறது. ஆனால் இங்கு எந்த ஒரு போட்டியும் நடக்கவில்லை இது ஒரு புதிய மைதானம். கண்டிஷன் என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. பயிற்சி ஆடுகளத்தை பார்க்கும் பொழுது இது ஒரு மெதுவான ஆடுகளமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். குறைந்த ஸ்கோரே அடிக்க முடியும். மேலும் இங்கு ஐபிஎல் போட்டியும் எதுவும் நடக்கவில்லை”
இதையும் படிங்க : பாகிஸ்தான் டெஸ்ட்.. இங்கிலாந்து அதிரடி பிளேயிங் XI அறிவிப்பு.. ஸ்டோக்ஸ்க்கு தொடரும் சோகம்
“அழுத்தம் என்பது எப்பொழுதும் இருக்கும் நாம் அதைப் பற்றி நினைத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. நாம் நம்முடைய செயல் முறையில் கவனம் செலுத்தி விளையாட வேண்டும். எனவே நாங்கள் இதில்தான் கவனம் செலுத்துவோம். தற்போது ஓய்வு பெற்றுவிட்ட சாஹிப் பாய் இல்லை.எல்லோரும் ஒருநாள் ஓய்வு பெற்றது தான் ஆக வேண்டும். நாங்கள் இந்திய அணியை வெல்ல முடியும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.