பாபர் அசாம் செய்த காரியம்.. நைட்டு தூக்கமே வரல.. திரும்ப திரும்ப பார்த்தேன் – பாகிஸ்தான் தகானி பேச்சு

0
33
Dahani

தற்போது பாகிஸ்தான் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் ஒன் டே கப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாபர் அசாம் பேட்டிங்கில் செய்த ஒரு மேஜிக் தன்னுடைய தூக்கத்தை கெடுத்து விட்டதாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானி கூறியிருக்கிறார்.

ஒருபுறம் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டை ஆழத்திலிருந்து வளர்ப்பதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஈடுபடாமல், இப்படியான வெள்ளை பந்து தொடர்களை உள்நாட்டில்நடத்துவதும், பாகிஸ்தான் உயர் செயல் திறன் இயக்குனர் மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பாகிஸ்தானை விட்டு வேலையில்லாமல் வெளியேறி இருப்பதும் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

பாபர் அசாமின் அசத்தல் பவுண்டரிகள்

நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் பாபர் அசாம் அணியும் முகமது ரிஸ்வான் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முகமது ரிஸ்வான் அணி 231 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. எனவே பாபர் அசாம் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய பாபர் அசாம் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் மூன்றாவதாக வந்த பாபர் அசாம் ஷாநவாஸ் தஹானி வீசிய போட்டியின் எட்டாவது ஓவரில் இரண்டாவது பந்தில் இருந்து ஆறாவது பந்து வரை தொடர்ந்து 5 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இருந்த போதிலும் கூட பாபர் அசாம் 45 ரன்கள் எடுக்க அவரது அணி 105 ரன் மட்டுமே எடுத்து சுருண்டு தோல்வி அடைந்தது.

- Advertisement -

இரவு தூக்கமே போச்சு

இந்த நிலையில் நேற்று பாபர் அசாமுக்கு ஐந்து பவுண்டரிகள் தொடர்ந்து கொடுத்த பாகிஸ்தான் வலதுகை இளம் வேகபந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானி, பாபர் அசாம் பேட்டிங் செய்த விதம் தன்னுடைய தூக்கத்தை கெடுத்து விட்டதாகவும் அதை நம்ப முடியவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஆஸியில் 2வது முறை டெஸ்ட் தொடர வெல்ல நினைக்கல.. ரவி சாஸ்திரிதான் அந்த மேஜிக் செய்தார் – அஸ்வின் வெளியிட்ட தகவல்

இது குறித்து ஷாநவாஸ் தஹானி கூறும் பொழுது “பாபர் அசாம் அடித்த அந்த ஐந்து பவுண்டரிகளை என்னால் மீண்டும் மீண்டும் பார்ப்பதை நிறுத்த முடியவில்லை. மேலும் என்னால் தூங்கவே முடியவில்லை. அவர் எப்படி அந்த பந்துகளை அவ்வளவு எளிதாக மாற்றி பவுண்டரிகள் அடித்தார் என்பது புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -